வாடிப்பட்டி சந்தையால் நெரிசல்: மக்கள் அவதி

வாடிப்பட்டி: வாடிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே செவ்வாய்தோறும் வாரச்சந்தை நடக்கிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சந்தைக்கு நள்ளிரவு முதலே கோழி, ஆடு, மாடுகளை விற்க, வாங்க வியாபாரிகள், விவசாயிகள் வர துவங்குவர். இவர்களது மினி வேன்கள் சந்தை, பஸ் ஸ்டாண்ட் மட்டுமின்றி மெயின் ரோட்டில் இருபுறமும் ஒன்றரை கி.மீ.,க்கு அணிவகுத்து நிறுத்தப்படுகின்றன. சந்தைக்குள் சென்று வரும் வாகனங்கள், லாரிகளால் மெயின் ரோட்டில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது.

காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரையும், பின் காய்கறி சந்தையால் மாலையில் நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டி உள்ளது. சில பஸ்கள் வாடிப்பட்டியை தவிர்த்து நான்கு வழிச்சாலையில் சொல்வதால் பயணிகள் பாதிக்கின்றனர். கூடுதல் போலீசார் மூலம் போக்குவரத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement