குழாய் உடைந்து குடிநீர் வீண்

சாத்துார்: சாத்துார் நகராட்சிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் மூலம் நாள்தோறும் 30 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் வழங்கப்பட வேண்டும்.

ஆனால் மின்வெட்டு குழாய் உடைப்பு போன்ற காரணங்களால் தினசரி 18 முதல் 28 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே கிடைத்து வருகிறது.

இந்த குடிநீரை கொண்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சத்திரப்பட்டி விலக்கு அருகில் நகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாயில் கடந்த ஒரு வார காலமாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி நான்கு வழி சாலை சர்வீஸ் ரோட்டில் உள்ள மழை நீர் வடிகாலில் கலந்து வருகிறது.

நகராட்சி நிர்வாகமும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement