இலவச தொழிற்பயிற்சி

காரியாபட்டி: காரியாபட்டியில் நாசே கிராமப்புற இலவச தொழிற்பயிற்சி திட்ட நிறைவு விழா நடந்தது. அறங்காவலர் சீனிவாசன் தலைமை வகித்தார். பேரூராட்சி கவுன்சிலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

இன்ஸ்பெக்டர் விஜய காண்டீபன், பேரூராட்சி தலைவர் செந்தில், லயன்ஸ் கிளப் மண்டல தலைவர் (பொறுப்பு) அழகர்சாமி, வக்கீல் ஜெயப்பிரகாஷ் பேசினர்.

ஏ.எம். இ.டி., பல் கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

பென்டகன் கார்மெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் ஜவகர் பெண்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார். நிர்வாகி மாயக்கண்ணன் நன்றி கூறினார்.

Advertisement