புகழூர் டி.என்.பி.எல்., - ஐ.டி.ஐ.,யில்மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
கரூர்:-புகழூர் டி.என்.பி.எல்., ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தொழிற்பயிற்சி நிலையத்தில், எலக்ட்ரீஷியன், பிட்டர், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், இயக்க உதவியாளர் (காகிதகூழ் மற்றும் காகிதம்) ஆகிய பிரிவுகளுக்கு, 2 ஆண்டு பயிற்சியும், வெல்டர் பிரிவு மாணவர்களுக்கு ஓராண்டு பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.
பயிற்சியில் சேர கல்வித்தகுதியாக 2 ஆண்டு பயிற்சி பிரிவுகளுக்கு குறைந்தபட்சம், 10 ம் வகுப்பு தேர்ச்சியும், ஓராண்டு பயிற்சி பிரிவிற்கு, 8ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். மேலும், விபரங்களை தொழிற்பயிற்சி நிலையத்தின், 04324-296442, 9486505953 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
87 ஆண்டு கல்விச்சேவையில் ஸ்ரீ மரகதாம்பிகை உயர்நிலைப் பள்ளி அரசு நிர்ணயித்த கட்டணத்தைக்கூட பெறாமல் தரமான கல்வி வழங்கும் நிர்வாகம்
-
ஞாயிறு: கெத்து காட்டும் புதுச்சேரி காக்கிகள் ‘பிரசிடென்ட்ஸ் கலர்’ அங்கீகாரத்தால் குஷி
-
வைகாசி விசாக திருவிழாபால்குடம் ஊர்வலம்
-
டில்லி உஷ்
-
டிரம்ப் படத்துடன் கரன்சி வடிவமைப்பு பணி மும்முரம்
-
பெண்கள் பாதுகாப்புக்கு சக்தி ‘வார் ரூம்’ ஆந்திரா போலீசில் விரைவில் அறிமுகம்