சென்னையில் அதிர்ச்சி; 61 வயது மூதாட்டிக்கு 5 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை

5

சென்னை: சென்னை வேளச்சேரியில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை அளித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை வேளச்சேரியில் 61 வயது மூதாட்டி நடைப்பயிற்சி சென்றுள்ளார். அப்போது அவருக்கு கும்பல் ஒன்று பாலியல் தொல்லை அளித்துள்ளது. இது குறித்து வேளச்சேரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மூதாட்டியை 5 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement