கஞ்சா : இளைஞர் கைது

அருப்புக்கோட்டை, மே 29-

திருச்சுழி அருகே எர்ரம்பட்டி பகுதியில் திருச்சுழி எஸ்.ஐ., அருண்குமார் தலைமையில் போலீசார் மயானம் அருகில் சுற்றி திரிந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் எர்ரம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன், 25, என்பதும், மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வருவதாகவும், ஊருக்கு வரும்போது 15 கிராம் கஞ்சா பொட்டலங்கள் கொண்டு வந்தததும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

____

Advertisement