நடராஜர் கோவிலில் செங்கோல் தினம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் செங்கோல் தினம் கொண்டாடப்பட்டது.

 பார்லி.,யில், பிரதமர் நரேந்திர மோடி செங்கோல் நிறுவிய நாளையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் செங்கோல்  தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

 இதையொட்டி நேற்று நடராஜர் கோவிலில் செங்கோலுக்கு பட்டு வஸ்திரம் , மாலை அணிவிக்கப்பட்டு, கோளாறு பதிகம் பாடி , தருமம் நிலைக்க வேண்டி கோவில் தீட்சிதர்கள் உறுதிமொழி ஏற்றனர். 

நிகழ்ச்சியில் கோவில் கமிட்டி செயலாளர் ஜெயசூர்யா , வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

Advertisement