ரூபாய் நோட்டுகளில் புதிய பாதுகாப்பு அம்சங்கள்; அறிமுகம் செய்கிறது ரிசர்வ் வங்கி
நமது சிறப்பு நிருபர்
ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் புதிய அம்சங்களை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது.
இந்திய ரூபாய் நோட்டுகளின் (குறிப்பாக ₹500, ₹200, ₹100 போன்ற புதிய நோட்டுகள்) பாதுகாப்பு மற்றும் கள்ள நோட்டுத் தடுப்புக்காக இந்திய ரிசர்வ் வங்கி பல மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை இந்தாண்டு அறிமுகப்படுத்த உள்ளது. அதே வேளையில், பண நோட்டுகளின் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் நோக்கில், வார்னிஷ் பயன்படுத்துவது குறித்தும் வங்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
மார்ச் 2026ன் இறுதியில், புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 11.9% உயர்ந்து ரூ. 41.2 லட்சம் கோடியாகவும், அவற்றின் எண்ணிக்கை 10.5% உயர்ந்து 17.1 லட்சம் கோடியாகவும் இருந்தது. இது ரொக்கப் பணத்திற்கான தேவை தொடர்ந்து நீடித்து வருவதையே பிரதிபலிக்கிறது. நாணயங்களின் புழக்கமும் அதிகரித்துள்ளது; அவற்றின் மதிப்பு 11.4% உயர்ந்து ரூ. 40,814 கோடியாக உயர்ந்துள்ளது.
ரூபாய் நோட்டுகளுக்கான தேவை அதிகரித்ததன் விளைவாக, 2025 நிதியாண்டில் 11.7% ஆக இருந்த 'பணப்புழக்கம்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 12.1% ஆக உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் கணக்கெடுப்பு படி, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மிக வேகமாக வளர்ந்து வந்தபோதிலும், தனிநபர்கள் மற்றும் சிறு வணிகர்கள் ரொக்கப் பணத்தையே அதிகம் விரும்புவதே இந்த அதிகரிப்பிற்குக் காரணம் என தெரிகிறது.
500 ரூபாய் நோட்டுகள்
ரூ. 2,000 பண நோட்டுகள் ஏறக்குறைய முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து ரூ. 500 நோட்டுகள் தற்போது ரொக்கப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கின்றன. மொத்தப் பண நோட்டுகளின் எண்ணிக்கையில் 41.2 சதவீதத்தையும், மொத்த மதிப்பில் 85.5 சதவீதத்தையும் ரூ. 500 நோட்டுகள் கொண்டுள்ளன.
கண்டறியப்பட்ட மொத்தக் கள்ளநோட்டுகளில் 97.6 சதவீதத்தை வங்கிகளே அடையாளம் கண்டுள்ளன. தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட ரூபாய் நோட்டுகளை 2026ம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து படிப்படியாக அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி தயாராகி வருகிறது என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ரூபாய் நோட்டுகளின் சுகாதாரம் மற்றும் ஆயுட்காலத்தை மேம்படுத்த, அச்சிடும் தாளை நுண்ணுயிர் கொல்லி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டதாக மாற்றவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
பத்து ரூவாக்கி டீ குடிச்சாலும் ஜி பெ பண்ணா ஜி. எஸ். டி கட்டுனீயான்னு ரெயட் வரும் வாய்ப்பு. அதான் மக்கள் கேஷ் குடுத்து டறாங்க.
ஹவாலாகளை முதலில் கண்காணிக்கவும்
ஏ. டி. எம். மிஷினில் 100 ரூபாய் கீழ் வந்தால் உதவியாக இருக்கும். அதிகம் 500 ரூபாய் தான் கிடைக்கிறது. பொது இடங்களில் சில்லறை தட்டுப்பாடு. 500 ரூபாய் நோட்டுகள் ஆண்டுக்கு ஒருமுறை வங்கியில் செலுத்தி அந்த ஆண்டை மெசின் மூலம் பிரிண்ட் செய்ய வேண்டும். இரண்டாவது ஆண்டுவரை வங்கியில் செலுத்தாமல் இருந்தால் அவற்றை கருப்பு பணம் என்று கருதி வரி விதிப்பு போன்ற சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கு தெரியாமல் நீண்ட காலம் இருவருக்கு இடையே தனியே பண பரிவர்த்தனை குறையும்.
பாதுகாப்பு அம்சங்களைப் படிப்படியாக ஏன் செய்யவேண்டும் >>
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 96 என்று வரலாற்றிலேயே மிக அதிகமாக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதையும் அப்படியே சரி செய்ய முயற்சி செய்யுங்கள்.
ரூபாய் நோட்டுகளில் எக்ஸ்பயரி தேதி போட்டால் பதுக்குவது நின்றுவிடும் காந்தி படத்துக்கு பதில் தூய சக்தி விஜய் படம் போடலாம்
ஒரு தகுதியும் இல்லாதவர்களை ஆட்சி அதிகாரங்கள் பதவிகளில் அமர்த்திக்கொண்டு இப்படியே புத்தம் புது ரீல்ஸ் ஓட்டிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். ஒரு முன்னேற்றமும் இருக்காது. சில வருடங்களுக்கு முன் நாட்டையே முடக்கி அணைத்து ருபாய் நோட்டுக்களையும் முடக்கி மாற்றி உலகில் எங்குமே இல்லாத பாதுகாப்பு அம்ஸங்கள் வைத்துவிட்டாத பிதற்றிக்கொண்டு. புதிய நோட்டுக்களை புழக்கத்தில் விடாமலேயே ஒரு சில மாதங்களில் அரசே முடக்க வேண்டிய சூழல்.
உங்களுக்குத்தான் இந்தியா பிடிக்கவில்லையே, பேசாம பாகிஸ்தானுக்கோ, ஆப்கானிஸ்தானுக்கோ போய்டுங்க சிவாஜி.
போலி பெயரில் வன்மம் கக்கும் டுமிலன் அவங்க பொருளாதார பா சி போல அச்சடிக்கும் மெஷின் அனுப்பலாம் அப்டின்னு நினைக்கிறார்.
tamilan போன்ற பிறவிகளின் கருத்து தேவையற்றது.சமூகத்தின் எதிரிகள்
ரூபாய் நோட்டுகளில் புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம் செய்கிறது ரிசர்வ் வங்கி. ஹி...ஹி...ஹி...கட்டுமர திருட்டு திமுககாரர்கள்: என்னமா அங்க சத்தம்?. எல்லா பாதுகாப்பையும் மீறி எப்படி ஊழல்கள் செய்வது லஞ்சங்கள் வாங்குவது என்று கடந்த 60 ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு பாடம் எடுக்கிறோம், எங்களுக்கே சவாலா?
அரசின் நிதி துறையில் இயங்கும் SPMCL நமது நாட்டின் கரண்சி ஐயும் நாணயங்களையும் வெளியிடுகிறதுடூப்ளிகேட் கரன்சிகளி தவிர்ப்பதற்காக பல சிறுசிறு நுண்ணனியா விபரங்களை கரன்சியை பிரின்டிங் செய்கிறார்கள் .
அமெரிக்கா போல் இந்தியாவும் அதிக பட்ச மதிப்புடைய கரன்சி 500 என்பதை வைத்துள்ளது
வெகுவிரைவில் இந்திய ரூபா கரன்சிகள் அமெரிக்க டாலர் போல் வெளிநாடுகளில் சாமான் சாதனம் வாங்க விற்க கையாளப்படும் என்ற மிக பெ ரிய நிம்மதி வந்துள்ளது
பாரத மாதாவிற்கு வணக்கம்
இப்போதெல்லாம் மின்னணு பண பரிவர்த்தனை அதிகமாக நடக்கிறது. அதில் பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம் செய்தால் மேலும் நல்லது.
தவிர சில சில்லறை வியாபாரிகள் இன்னமும் credit card வழியாக பணம் செலுத்துவதை மறுகிறார்கள். UPI மூலம் செலுத்துவதையே ஒப்புக்கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்கு என்ன ஆதாயம் என்று தெரியவில்லை. அரசுக்கு இதனால் என்ன நஷ்டம் என்று தெரியவில்லை. இதையெல்லாம் கவனத்தில் கொண்டால் நல்லது