ரவுடி ஐயப்பன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு
திருநெல்வேலி: முகமூடி அணிந்து தொடர் தாக்குதலில் ஈடுபட்ட ரவுடி ஐயப்பனை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தற்போது சிகிச்சைக்காக ஐயப்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் முகமூடி அணிந்து தொடர் தாக்குதலில் ஈடுபட்ட நெட்டூர் ஐயப்பனை பிடிக்கச் சென்றபோது தாக்க முயன்றதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்; காயம் அடைந்த ஐயப்பனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஐயப்பனை மாவட்ட எஸ்பி பிரசன்ன குமார் பார்த்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். ரவுடி ஐயப்பன் நடத்திய தாக்குதலில் போலீஸ்காரர் முத்துக்குமார் காயமுற்றார். ரவுடி ஐயப்பன் மீது ஆலங்குளத்தில் ஒரு கொலை வழக்கு உள்ளது. அவர் சரித்திர பதிவேடு கொண்ட ரவுடி ஆவார்.
பிரத்யேக வீடியோ!
தொடர் தாக்குதல் வழக்கு: ரவுடி அய்யப்பன் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கைது; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் பிரத்யேக வீடியோ நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
சுடப்பட்ட போலீசை போய் பாருங்கப்பா.. ரவுடி உடல் நலம் விசாரிப்பா?
கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இது தான் நிதர்சனம். கொலையும் செய்து , கேடுகெட்ட நீதித்துறை மற்றும் பேராசை கொணட வக்கீல்கள் மூலம் பெயில் கிடைத்து விடும். பிறகு வழக்கு கோவிந்தா . சர்வசாதாரணம் அடாவடித்தனம் ஆரம்பம்
சுடுவது எதற்கு ,பிறகு மக்கள் வரிப்பணத்தில் செலவு எதற்கு? உடல்நிலை சரியான பிறகு மீண்டும் திருட்டு வேலை செய்வதற்காக? மீண்டும் ரவுடித்தனம் செய்வதற்காக?
இவர்களுக்கெல்லாம் ஒரு பட்ட பெயர் என்னவோ படித்து பெட்ர பட்டம்போல மக்களை அழிக்கும் இந்த கொடூர சக்திக்கு இது போன்ற பட்ட பெயர்களை சூட்டாதீர்கள்