கூழாங்கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடி பைபாஸ் சாலை உயர்மட்ட பாலத்தின் கீழ், நேற்று அதிகாலை 5:00 மணியளவில் சுரங்கத்துறை உதவி இயக்குனர் செல்வக்குமார் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனை செய்தனர்.
அவ்வழியாக வந்த லாரியை மடக்கிய போது அதில் கூழாங்கற்கள் இருப்பது தெரியவந்தது.டிரைவர் தப்பியோடினார்.
லாரியை பறிமுதல் செய்து சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement