உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தை விரைவுபடுத்தணும்: தவெக அரசுக்கு பாஜ வலியுறுத்தல்
சென்னை: அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக அரசுக்கு தமிழக பாஜ வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர்களுக்கான பணிநியமனத்தை எளிதாக்கும் வகையில், 6 மாதங்களுக்குள் தேர்வு நடைமுறையை முடிக்க வேண்டும் என்றும், கௌரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் மற்றும் வயது வரம்பு தளர்வு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு நேற்று உத்தரவிட்டுள்ளது.
பல ஆண்டுகளாக காலியாக இருந்த உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆசிரியர் தகுதி வாரியம் மூலமாக தகுதித் தேர்வு நடைபெற்றும், இன்றுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத நிலையில், தற்போது வெளிவந்துள்ள இந்தத் தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
முந்தைய திமுக ஆட்சியைப் போல உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் மெத்தனம் காட்டி, ஆசிரியராகும் கனவில் இருக்கும் பட்டதாரிகளின் வாழ்வையும், கல்லூரி மாணவர்கள் எதிர்காலத்தையும் சிதைக்காமல், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்.
நீதிமன்ற உத்தரவுக்கிணங்க அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மேலும்
-
87 ஆண்டு கல்விச்சேவையில் ஸ்ரீ மரகதாம்பிகை உயர்நிலைப் பள்ளி அரசு நிர்ணயித்த கட்டணத்தைக்கூட பெறாமல் தரமான கல்வி வழங்கும் நிர்வாகம்
-
ஞாயிறு: கெத்து காட்டும் புதுச்சேரி காக்கிகள் ‘பிரசிடென்ட்ஸ் கலர்’ அங்கீகாரத்தால் குஷி
-
வைகாசி விசாக திருவிழாபால்குடம் ஊர்வலம்
-
டில்லி உஷ்
-
டிரம்ப் படத்துடன் கரன்சி வடிவமைப்பு பணி மும்முரம்
-
பெண்கள் பாதுகாப்புக்கு சக்தி ‘வார் ரூம்’ ஆந்திரா போலீசில் விரைவில் அறிமுகம்