குன்றக்குடியில் வைகாசி விசாகம்

காரைக்குடி:குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வெட்டிவேர் அலங்காரத்தில்

சண்முகநாதப் பெருமான் எழுந்தருளினார்.

குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று நடந்தது. காலை 7:00 மணிக்கு கோயிலில் இருந்து சண்முகநாதப் பெருமான் வெட்டிவேர் அலங்காரத்தில் ஆதினமட கொலு மண்டபத்திற்கு எழுந்தருளினார். காலை 9:30 மணிக்கு ஆதின மடத்தில் பொன்னம்பல அடிகள் தலைமையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, தமிழ் மாலை , திருமுழுக்காட்டல், பச்சை சாத்துப்படி பூஜை நடந்தது. இரவு, சண்முகநாதப் பெருமான் வெள்ளி ரதத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. குன்றக்குடி, காரைக்குடி உட்பட சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement