கோயில் விழாவில் முத்துப்பல்லக்கு

வத்தலக்குண்டு, மே 31-

வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா மே 5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பதினைந்து நாட்கள் அம்மன் மண்டகப்படிகளில் எழுந்தருளினார். மே 27ல் பூப்பல்லக்கில் வீதி உலா, பக்தர்கள் தீச்சட்டி, மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம், வண்டி வேஷ நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு அம்மன் முத்துப்பல்லக்கில் நகர் வலம் வந்தார். நேற்று மஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தார்.

Advertisement