அரசு பங்களாவை காலி செய்ய லாலு மனைவி ரப்ரி மறுப்பு; போலீஸ் உதவியுடன் காலி செய்ய பீஹார் அரசு முனைப்பு
புதுடில்லி: முன்னாள் முதல்வர் ரப்ரி தேவி அரசு பங்களாவை காலி செய்ய மறுத்த நிலையில் போலீஸ் உதவியுடன் காலி செய்வதற்கு பீஹார் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
பீஹாரில் முன்னாள் முதல்வர்களுக்கு அரசு ஒதுக்கியுள்ள பங்களாக்களில், அவர்கள் தங்கள் ஆயுள் முழுதும் தங்கியிருக்கலாம் என்ற சட்டம் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ரப்ரி தேவியை, பாட்னாவின் சர்குலர் சாலையில் உள்ள அரசு பங்களாவில் இருந்து காலி செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பான நோட்டீஸ் சமீபத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளாக பாட்னாவில் உள்ள 10, சர்குலர் ரோடு அரசு பங்களாவில் ரப்ரி தேவி குடும்பத்தினர் வசித்த வரும் நிலையில் தற்போது பாஜ தலைமையிலான புதிய அரசு, இந்த இல்லத்தை மாநில அமைச்சர் நந்த கிஷோர் ராமுக்கு ஒதுக்கி உத்தரவிட்டது. ரப்ரி தேவியை பங்களாவை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியும் அவர் அதை காலி செய்ய மறுத்து வருகிறார். பாட்னா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரப்ரி தேவி, தான் வீட்டை காலி செய்யப்போவதில்லை என முதல்வர் சாம்ராட் சவுத்ரிக்கு சவால் விடுத்த நிலையில், அந்த பங்களாவிற்கு வெளியே ஒரு பெரிய அளவிலான போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.
ரப்ரி தேவிக்கு அரசு பங்காளவை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்படுவது இது முதல் முறையல்ல. முந்தைய நிதிஷ் குமார் அரசின் போது, அவருக்கு ஒதுக்கப்பட்ட புதிய வீட்டிற்கு குடிபெயருமாறு ஒரு அறிவிப்பு அனுப்பப்பட்டது.இருப்பினும், அவர் அந்த உத்தரவுக்கு இணங்கவில்லை. கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தின் போது நந்த கிஷோர் ராம் மாநில பால் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவருக்கு தான் ரப்ரி தேவி தங்கியிருக்கும் பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.
அவர் நிருபர்களிடம் கூறுகையில், "புதிய அரசு தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பங்களாவைக் காலி செய்ய அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பங்களா ஒரு தனிப்பட்ட சொத்து அல்ல. ரப்ரி தேவிக்கு அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட புதிய வீட்டிற்கு அவர் குடிபெயர வேண்டும்" என்றார். பீஹார் சட்டசபை சபாநாயகர் பிரேம் குமாரும் அரசின் இந்த நடவடிக்கையை ஆதரித்ததோடு, அவையின் ஒவ்வொரு உறுப்பினரும் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.
அரசு பங்களாவில் தங்க அரசு பணியில் இருக்க வேண்டும். ஆயுள் காலம் வரை அரசு பங்களாவில் தங்க இயற்றிய சட்டம் 100 சதவிகிதம் சட்ட விரோதம். நீதிமன்ற தவறான அரசியல் வழக்கு விசாரணை ஏற்படுத்திய பயம் தான் அதிகாரிகள் ...
ஆளும் கட்சி அரசியல் முடிவை நிர்வாக, சட்ட விரோதமாக கண்மூடி தனமான பின்பற்றி வருகிறார்கள். போலீஸ் அதிகாரிகள், பொது பணி மற்றும் வருவாய் துறை கொண்டு அரசு பங்களா மீட்பது ஒரு சரியான சட்ட நடவடிக்கை.
இந்தியாவிற்குள் மர்ம நபர்கள் செயல் பட வேன்டிய காலம் வந்துவிட்டது
லல்லு பிரசாத் யாதவ் உயிர் வாழ ஒரு சிறுநீரகம் தானம் செய்த மகளை அடித்து விரட்டி விட்டார்கள்.... சட்டம் படித்த புண்ணாக்கு வியாபாரி...
இவருக்கு சொந்த வீடு இல்லை. நம் முன்னாள் முதலமைச்சருக்கு சொந்த மகிழ்வுந்து இல்லை. உழைச்சு உழைச்சு ஓடாய் தேஞ்சவங்க நிலைமை இப்படி இருக்கு
தமிழக திராவிட குடும்ப கூட்டங்களை தாண்டி, விஞ்ஞான பூர்வமாக கொள்ளை அடித்த குடும்பம் இது. இவரது மகன் குடித்து விட்டு வந்து பீகார் சட்டசபையில் பேசுகிறார் என்று வீடியோ வருகிறது.
இந்த குடும்பங்கள் எல்லாம் நாடு முழுவதும் பின்பற்றுவது போலி ஏமாற்று செகுலர் கொள்கை. அதாவது ஹிந்துக்கள் இரண்டாம் தர குடிமக்கள் என்பது. தேச விரோத சக்திகள் நாட்டையே அடகு வைக்கிறது.
பங்களா மட்டுமா சொந்தம் இந்தியா முழுக்கவே வாய்ப்பு வசதியும் உள்ள தரம் கெட்ட அரசியல்வாதிகளுக்கு தானே சொந்தம். வீட்டுக்குள்ளயேஓ பின்புறத்திலோ பள்ளம் தோண்டி பணத்தை புதைச்சு வைச்சிருப்பாங்களோ என்று சந்தேகம் வருது. அப்படி இருந்தால், அதை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா வெளியே தெரியாமல் வெளியேற்ற நாள் புடிக்கும் தான்.
லஞ்ச ஊழலில் சுற்றி மாநிலத்தை சூறையாடிய இவர்களுக்கு அரசு செலவில் எதற்கு பங்களா கொடுக்க வேண்டும் என்று புரியவில்லை அதுவும் வேறு வீடு கொடுக்கிறார்களாம்
அரசாங்க இடம் இது என்ன அக்கிரமம் அவர்கள் என்ன வசதி இல்லாதவர்களா.தயவுசெய்து சட்டத்தை மாற்றுங்கள்.
ராப்ரி க்கு விரைவில் (சொந்த) வீடு கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
நேர்மையற்றவர்கள் ...... அது சரி .... தர்மேந்திர பிரதான் எப்போ ராஜினாமா செய்வார் >>
தகர ராஜ், வேங்கை வயல், யார் அந்த சார், கள்ளக்குறிச்சி மரணத்திற்கு ராஜினாமா செய்தவர் கேட்ட ஒடனே செய்வார்
why?
41 பேர் மரணத்திற்கு காரணமானவர் எப்போ பாவ மன்னிப்பு கேட்டு ராஜினாமா செய்வார்.
DHARMARAJ THANGARATHINAM MURASOLI THUDAITHA MOOLAYODU SINDHIKKA THERIYAAMA ULARUVADHU NIRUTHU.
அரியலூர் ரயில் விபத்துக்கு ராஜினாமா செய்தார் ஒரு பிரதமர். சர்க்கார் வாகனத்தைத் தன் சொந்த உபயோகத்திற்கு உபயோகிக்காதவர்கள் திருவாளர்கள் ராஜாஜி ஓமந்தூரார் காமராஜ். அவர்களைப் போன்றோர் ஏராளமாக இருந்தார்கள். இன்று இவர்கள் தான் நாட்டிற்கு நமக்கு நல்வழிக்காட்ட அரசியலுக்கு வந்தவர்கள் நம் தலை விதி வலியது
அரியலூர் விபத்து இரயில்வே அமைச்சர் ராஜினாமா என்பது ஊரை ஏமாற்றும் கதை. 1956 டிசம்பர் மாதம் ராஜினாமா செய்தார். அந்த மக்களவை பிப்ரவரி 1957 வரைமட்டுமே. 2 மாதம் மட்டுமே இருக்கும்போது ராஜினாமா செய்தார்.