இந்திய எல்லை குறித்து கருத்து; நேபாள பிரதமர் பதவி விலக வலுக்கும் போராட்டம்
நமது நிருபர்
இந்தியாவுடனான எல்லை பிரச்னை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நேபாள பிரதமர் பாலேந்திர ஷா பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
அண்மையில் இந்தியா - நேபாள எல்லை பிரச்னை குறித்து அந்நாட்டு பார்லியில் பேசிய அந்நாட்டு பிரதமர் பாலேந்திர ஷா, நேபாளமும் பல இந்திய பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாக கூறினார். மேலும், மிகவும் சிக்கலான இந்தப் பிரச்னையை, ஆங்கிலேயர்கள் காலத்தில் வகுத்த எல்லை என்பதால், பிரிட்டனை இணைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் கூறினார்.
ஆனால், எல்லை விவகாரத்தில் உறுதியாக இருக்கும் மத்திய அரசு, இருநாட்டு எல்லைப் பிரச்னையில் எந்தவொரு 3ம் தரப்பிற்கும் இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
இதனிடையே, நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவின் இந்தப் பேச்சுக்கு அந்நாட்டில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேபாள பார்லியின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் முழக்கங்களால் முடக்கப்பட்டன.
மேலும், பாலேந்திர ஷா பதவி விலக வேண்டும் என்று வலிறுத்திகாத்மண்டுவின் மைதிகர் மண்டலாவில் மாணவர் அமைப்புகளும், நேபாளி காங்கிரஸ் சார்புடைய தருண் தளம் அமைப்பும் மாபெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
நேபாளத்தில் வெடித்த கிளர்ச்சி மற்றும் போராட்டங்களினால் ஆட்சியைப் பிடித்த பாலேந்திர ஷாவுக்கு, பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே எதிர்ப்பலை கிளம்பியிருப்பது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியான போராட்டங்களால் நேபாளத்தின் வளர்ச்சி மிகவும் பாதிப்படைகிறது?
இதுக்குத்தான் யாருக்கும் பேட்டி குடுக்காம டபாய் க்கணும். பெரியவர், விஜய் பாதையில் செல்லணும். வாய் பொழப்பக் கெடுக்கும்
ஒரு நல்ல நாடு ..சுயநலம் மிக்க ஒருக் கட்சி வெளிநாட்டுத் தொடர்புடன் ஸ்திரத்தன்மை இல்லாது செய்து வருகிறது.
உண்மை. முற்றிலுமாக உண்மை!
அறிவோட பேசணும். ராகுல் மாதிரி புத்திசாலின்னு எதாவது உளறக்கூடாது. எல்லை பிரச்சனை என்பது சமவெளியில் இருக்கும் எல்லையில் தவிர்க்கப்படலாம். ஆனால் மலைப்பாங்கான பகுதியில் நிச்சயம் ஏற்படும். குறிப்பாக எல்லை ஆக்கிரமைப்பு என்பது எதோ ராணுவமும் எல்லைப்பாதுகாப்புப்படையும் செய்வதல்ல . பொதுமக்களும் அதாவது மலைப்பாங்கான எல்லையில் வசிக்கும் இருதரப்பு மக்களும் எல்லைதாண்டி விவசாயம் ஆடுமாடு மேய்ப்பதும் இதில் அடங்கும் . நேபால் பிரதமர் நேர்மையாக கூறிருப்பது இருதரப்பிலும் இந்த பிரச்சனை உள்ளதே என்பதே. எதோ இந்தியா மட்டும் இதை செய்ததாக கூறமுயற்சிப்பது உனது அரைகுறை மார்க்சிஸ்ட் புத்தியை காட்டுகிறது
நேபாள - காங்கிரஸ். வேற என்ன எதிர்பார்ப்பது?
எங்கும் ஸ்திரத்துதன்மை கூடாது. இதுவே டீப் ஸ்டேட் அதிகார கூட்டத்தின் ஆணவ போக்கு. ஜெனெரேஷன் இசட் என்பதை ஓர் மடக்கூட்டமாக வைத்து மொபைல் அப்ளிகாஷன் மூலமாக ஊடுருவி பல அட்டூழியங்களை செய்துவரும் டீப் ஸ்டேட் செயல்களை கவனிப்போருக்கு இது புரியும். அமெரிக்கா அழிவை நோக்கி செல்கிறது
இதே போல் இங்கும் கலவரம் செய்ய காங்கிரஸ் , AAP தயவோடு cockroach janata party முயல்கிறது ..ஜூன் 6 அன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ...gen Z க்கள் ஜாக்கிரதை ..அப்பறோம் நாடு அவ்ளோதான்
அந்தந்த நாட்டோட எல்லையை யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது அப்படி ஆக்கிரமித்து இருந்தால் அந்த எல்லையை விட்டுக் கொடுத்து விட வேண்டும் ஏன்னா அது உங்களுக்குச் சொந்தமானது இல்லை அடுத்த நாட்டு எல்லையை நீங்க எடுத்து என்ன செய்ய போறீங்க அதனால சண்டை சச்சரவு இல்லாமல் அவரவர் இடத்தை விட்டுக் கொடுத்துவிட வேண்டும் இதுதான் எல்லாருக்கும் நல்லது நிம்மதியான வாழ்க்கை தொடரும் இல்லையென்றால் இரு நாட்டுக்கும் இடையே சண்டை சச்சரவுகள் ஏற்படும். உயிரிழப்புகள் ஏற்படும் இது தேவையா என்பதை நன்றாகச் சிந்தித்துச் செயல்படவும், அந்தந்த நாட்டினுடைய எல்லைகளையே பாதுகாத்து அந்நாட்டு மக்களுக்கு நல்ல ஒரு நிம்மதியான வாழ்க்கையை கொடுத்தால் போதும் அதை விட்டுவிட்டு, எல்லையை பிடிக்கப் போறேன் என்று தொல்லை கொடுக்க வேண்டாம் உயிரிழப்புகளைத் தவிர்க்க வேண்டும் அமைதியை தேடுங்கள் அதுவே போதும்.
உன்னோட சீன முதலாளிகிட்ட சொல்லுமேலும்
-
டில்லி உணவகத்தில் தீ விபத்து; 10 பேர் உயிரிழப்பு
-
டாஸ்மாக் மதுக்கடைகளில் கூடுதல் வசூல் புகார்; முடிவு கட்ட முதல்வர் ஆலோசனை
-
சொல்கிறார்கள் –––––––––––– எங்கள் கிராமத்திலேயே வருமான வரி கட்டும் முதல் பெண் நான்!
-
தமிழகத்தின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்பு
-
இந்தியா உட்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி; அமெரிக்கா பரிந்துரை
-
சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 18 பேர் கைது; மேற்கு வங்க அரசு அதிரடி