சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 18 பேர் கைது; மேற்கு வங்க அரசு அதிரடி
கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய 6 குழந்தைகள் உட்பட வங்கதேசத்தினர் 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்கத்தில் சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு எதிராக அம்மாநில பாஜ அரசுகடுமையான நடடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 6 குழந்தைகள் உட்பட வங்கதேசத்தினர் 18 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் நேற்று இரவு (ஜூன் 02) நடத்தப்பட்ட சோதனையில் இவர்கள் பிடிபட்டனர். முதற்கட்ட விசாரணையில், இவர்கள் அனைவரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், முகவர்களின் உதவியுடன் எல்லை வேலியைத் தாண்டி சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததையும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கடந்த மூன்றரை ஆண்டுகளாகக் குல்தாலி பகுதியில் வசித்து வந்துள்ளனர். இவர்களில் சிலர் உள்ளூர் செங்கல் சூளைகளில் வேலை செய்தும் வந்துள்ளனர். இவர்களின் அடையாள ஆவணங்கள் மற்றும் பின்னணி சரிபார்க்கப்பட்ட பிறகு, அவர்கள் தற்காலிகத் தடுப்பு மையங்களுக்கு மாற்றப்படுவார்கள். அங்கிருந்து அவர்களை மீண்டும் வங்கதேசத்திற்குத் திருப்பி அனுப்புவதற்கான நிர்வாக நடைமுறைகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று இரவு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் போலீஸாரும், குற்றப்பிரிவினரும் இணைந்து நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக ஊடுருவியதாகச் சந்தேகிக்கப்படும் 290க்கும் மேற்பட்ட வங்கதேச நாட்டினரைக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
எதுக்கு கைது ?? வெச்சு சோறு போடவா ??
இந்த லட்சணத்துல வங்க தேசம் அரசு என்ன சொல்லுதுன்னா இந்தியாவில இருக்கிற மத சிறுபான்மையினரை நாம தான் அவிங்க நாட்டுக்குள்ளேயே வலுக்கட்டாயமா திணிக்கிறோமாம் ...அதுக்கு நம்ம நாட்டுல இருக்குற சில அர்பன் நக்சல் உள்பட பலர் ஆமாம் போடுறானுங்க ...இதெப்பிடி இருக்கு ?
மன்மோகன்சிங் காலத்தில் திட்டக்கமிஷன் அங்கத்தினராக இருந்த சயீதா ஹமீது சொல்கிறார். "பங்களாதேஷிகள் இந்தியாவில் இருந்தால் என்ன? அவர்களும் மனிதர்கள்தானே?" மதப்பாசம் பொங்கி வழிகிறது. அம்மணி உங்களுடைய வீட்டில் சில பங்களாதேஷிகளை வைத்துக்க்கொண்டு சோறு போடுங்களேன், அரசு உதவியை எதிர்பார்க்காதீர்கள்.
கோவை, திருப்பூர் மாற்றம் சென்னை மேடவாக்கம் பகுதிக்குள்ள வங்க தேசத்தினரைய் தமிழக அரசு விரட்ட நடவடிக்கையயை எடுக்குமா அல்லது முதல்வரிடமிருந்து ஆணை வருமா?
தமிழகத்தில் மட்டுமே சுமார் பத்து லட்சம் வங்கதேச கள்ள குடியேறிகள் இருக்கிறார்களாம். குறிப்பாக திருப்பூர் பகுதியில் மிக அதிகம். அவர்களை வேலைக்கு வைத்தவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
எல்லையை தாண்டி இத்தனை மாநிலங்கள் கடந்து வந்த பங்களாதேசிகளை அரசாங்கத்தாலேயே கண்டுபிடிக்க முடியவில்லையாம் . உளவு துறை , போலீசாலேயே முடியாததை இந்த திருப்பூர் கம்பெனி முதலாளிகள் எப்படி கண்டுபிடிக்க முடியும் நடராசு . உனக்கு ரொம்பவும் குசும்புயா ?.
நாடு முழுவதும் இப்படி அதிரடி நடவடிக்கை எடுத்து, சட்டவிரோதிகளை உடனே நாட்டைவிட்டு துரத்தவேண்டும். கூடவே அவர்களுக்கு இந்நாள்வரை ஆதரவு மற்றும் அடைக்கலம் கொடுத்தவர்களை அடித்து துரத்தவேண்டும்.
18 பேர் எல்லாம் பிஸ்காத்து. கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் நம் தேசத்திற்கு விசுவாசமானவர்கள் அல்ல. எல்லோரையும் துரத்தி அடிக்க வேண்டும்.
அவங்க நாட்டில் பண்ணுவது போலவே பண்ணிடுங்க இந்த பிணிகளை
மேற்க்கு வங்கம் மட்டுமல்ல இந்தியாவில் பல பாகங்களில் அந்நிய நாட்டு சட்ட விரோத குடியேறிகள் உள்ளனர் அவர்களை கண்டறிந்து அப்புறப்படுத்தாவிட்டால் தீவிரவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இவங்களை எல்லாம் வச்சிக்கிட்டு சோத்தை போட்டுக்கிட்டு இருப்பதைவிட அடிச்சி அவங்க நாட்டுக்கே உடனே அனுப்புறது தான் நல்லது.