டாஸ்மாக் மதுக்கடைகளில் கூடுதல் வசூல் புகார்; முடிவு கட்ட முதல்வர் ஆலோசனை
சென்னை: டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு ரூ.10 வசூலிப்பதாக எழுந்து வரும் புகார்களுக்கு முடிவு கட்டும் வழிமுறை குறித்து அதிகாரிகள், அமைச்சருடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக புகார் எழுந்தது. கடந்த திமுக ஆட்சியில் மதுபாட்டிலுக்கு ரூ.10 வசூலிக்கப்பட்டதை முதல்வர் விஜய், தேர்தல் சமயத்தில் கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில், டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு ரூ.10 வசூலிப்பதாக எழுந்து வரும் புகார் தொடர்பாக முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். எம்.ஆர்.பி., கட்டணம் மட்டுமே மது பாட்டிலுக்கு வசூலிக்க வேண்டும்; எக்காரணம் கொண்டும் கூடுதலாக வசூலிக்கக்கூடாது. அதற்கான வழிமுறைகளை தயார் செய்யும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
மேலும், பள்ளி, கோவில் அருகே இருக்கப்படும் 717 மதுக்கடைகள் மூடப்படும் நடவடிக்கை குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
டாஸ்மாக்கை முற்றிலும் ஒழிக்க வேண்டும்...
எம் ஜி ஆருடன் தன்னை ஒப்பிட்டு புளங்காகிதம் அடைந்த முதல்வரே ...ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். அவருக்கு நிகராவானவர் அல்ல நீங்கள் ....அவர் வறுமையை உணர்ந்தவர் ...நீங்க வறுமை என்றால் என்னவென்றே தெரியாதவர் ... அவர் கொடுத்து கொடுத்து சிவந்த கரம் ...நீங்களோ வருமான வரி பிரச்சனையில் இன்னமும் மேல் நீதிமன்றத்தின் கதவை தட்டும் அளவிற்கு நேர்மையானவர் ...இந்த குருட்டு அதிர்ஷ்டம் நீண்ட நாளைக்கு நீடிக்காது ....இப்படி வீராப்பு பேசிக்கொண்டு இருந்தால் சில மாதங்கள் கூட ஆட்சி நீடிக்காது ...
even on elite shops 40 rs. extra पर bottle.
இன்னமும் 11 to 11 பார்களில் பாட்டிலுக்கு $ 30 முதல் 40 அதிகமாக பிடுங்குவது அமைச்சருக்கு தெரியுமா தெரியாதா?
பதவிக்கு வருவதற்கு முன்னும் தெரியும், வந்த பின்னும் தெரியும். இந்த சாதனை முந்தைய அரசின் சாதனை. இதற்கு ஏன் இத்தனை நாட்கள்?
மரத்தடியில் நின்று கொண்டு வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கும் போக்குவரத்து காவலர்கள் மீது எப்பொழுது நடவடிக்கை எடுப்பதாக உத்தேசம்?
மிகவும் சரியாக சொன்னீர்கள். அதுவும் வளைவு சாலைகளில், வளைவிற்கு பின் நிற்பார்கள். அல்லது சிக்னல் ஜங்ஷனில் இருந்து போக்குவரத்து ரெகுலேட் செய்யாமல், சிக்னல் தாண்டி நிற்பார்கள். தொலைவில் இருந்து மக்களுக்கு தெரியாது. கிட்ட வந்தவுடன், லபக்கென பிடிப்பார்கள். ஹெல்மெட், ட்ரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ், ஆர்.சி., புகை மாசு கட்டுப்பாடு சான்றிதழ் எல்லாம் சரியாக இருந்தால்,,ஓவர் ஸ்பீட் என்பார்கள். நாம் எப்படி நிரூபிப்பது?