புகார்களுக்கு கள ஆய்வின்படி தீர்வு: புதிய  மாநகராட்சி கமிஷனர் உறுதி 

கோவை: கோவை மாநகராட்சி கமிஷனராக கட்டா ரவி தேஜா பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன்பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்கும், ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களில் உள்ள குறைகளை களைவதற்கும் கவனம் செலுத்துவேன்.

மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண அதிகாரிகளை வலியுறுத்துவேன். புகார் வந்தது முதல் தீர்வு கண்டது வரை எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக சமர்ப்பிக்க வலியுறுத்துவேன்.

புகாரின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் இருக்காது. களஆய்வு வாயிலாக தீர்வு காணப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

'மாநகராட்சி கவுன்சிலர்களில் 97 பேர் தி.மு.க.,வை சேர்ந்தவர்கள். ஆனால் ஆட்சி த.வெ.க. கையில் உள்ளது. இந்நிலையில் மாநகராட்சியில் உங்கள் பணி சவாலாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா' என்ற கேள்விக்கு, ''விதிமுறைபடி நடப்போம்,'' என்றார்.

Advertisement