மகிழ்ச்சியாக கற்றுக் கொள்ளுங்கள்; வெற்றி தேடி வரும்; மாணவர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
சென்னை: கல்வி ஆண்டின் முதல் நாளை தொடங்கும் மாணவச்செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்; மகிழ்ச்சியாக கற்றுக் கொள்ளுங்கள்; வெற்றி உங்களைத் தேடி வரும் என முதல்வர் விஜய் தெரிவித்தார்.
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் இன்று (ஜூன் 04) பள்ளிகள் திறக்கப்பட்டு புதிய கல்வியாண்டு தொடங்கியது. பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
இந்நிலையில் வாழ்த்து தெரிவித்து முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கை: இந்தக் கல்வி ஆண்டின் முதல் நாளை, புதிய நம்பிக்கையோடு தொடங்கும் என் அன்பிற்குரிய மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். கல்விதான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி.
உயரிய கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அதற்கேற்ப கடினமாக உழையுங்கள். பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமாக இருக்கட்டும். மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
அரசியல்வாதிகள் மற்றும் நீ நடத்தும் தனியார் பள்ளிகளை மூடிவிட்டு அரசு பள்ளிகளை தரம் உயர்த்த முடியுமா உன்னால்?
If you do not study also no problem bro,We will take care in our party
சும்மா ஊழலை ஒழிப்பேன் என்றவீர வசனம் வேண்டாம் முதல்வர் விஜய் அவர்களே. படிக்க பள்ளிக்கு அனுப்ப அரசுப் பள்ளிகள் முக்கிய நகரங்களில் உள்ளவை மட்டும் சற்று தரத்துடன் உள்ளன. ஆகவே அரசு பள்ளி போல பாலியல் சீண்டல்கள் இல்லாத தனியார் பள்ளிகளுக்கு பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்ப வேண்டி உள்ளது. சேலம் போன்ற நகர்களீல் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் பகல் கொள்ளை அளவில் உள்ளது. 2வது வகுப்புக்கு வருடம்₹30,000/- நோட்டு, புத்தகம்,யூனிபார்ம் ஆகியன தனி என்பது சர்வ சாதாரணம். இவை CBSE பள்ளிகளும் அல்ல. 2மொழி கொள்கையால் நன்மை கிடைக்குதோ இல்லையோ, இந்த பள்ளி கல்வி கட்டண கொள்ளையை முதலில் தடுத்து பெற்றோரை காப்பாற்றுங்கள். இந்த பள்ளிகள் ஒன்றும் சூப்பர் கல்வியாளர்களை ஆசிரியர்களாக கொண்டிருக்கவில்லை. வெறும் சாதாரண பட்டப்படிப்பு படித்து முடித்தவர்கள் தான் அனுபவமற்ற ஆசிரியர்கள்,வெறும் ரூ.7000/- மாச சம்பளத்துக்கு வேலை செய்பவர்கள் இவர்கள். மாணவ சமுதாயத்தை முதலில் காப்பாற்றுங்கள் முதல்வரே. கல்வி கொள்கை பற்றி வார்த்தைப்போர் வீண்
தனியார் பள்ளிகள் பிடுங்கும் அநியாய கல்வி கட்டணத்தை முறைப்படுத்துவது பற்றி ஆட்சியாளர்கள் யாரும் பேசாமல் இருப்பது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி
ஒரு பிராமணாள் முதல்வர் ஆகும்வரை ஓயமாட்டேன்
அதற்க்கு ஆசைப்பட்டதுமில்லை ஆசைப்படப்போவதுமில்லை அவர்களுக்கு எங்கே மதிப்பிருக்கிருக்கிறதோ தேவைப்படுகிறார்களோ அங்கே அவர்கள் போனார்கள் போவார்கள்...உங்களுக்கு ஏன் பதற்றம், ஏன் இந்த பிதற்றல்?
1). உண்மைதான்!
2). பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து முடித்து காலேஜ் படிப்பையை பாதியில் நிறுத்தி உள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கு தான் ஒரு பட்டதாரி இல்லை என்ற வருத்தம் இருப்பதால் மற்றவர்களை படிக்க சொல்வது நியாயமே
முதல்வர் முதல்ல பி எம் ஸ்ரீ திட்டத்தை அமுல் படுத்த உத்தரவு போட்டுட்டு அப்பறம் இதை சொன்னீங்கன்னா அதுக்கு ஒரு அர்த்தம் இருக்கும். அதுவரை வெட்டிப்பேச்சுதான். மாணவர்களின் எதிர்காலத்தை உண்மையிலேயே வளமாக்க உருப்படியானதை செய்யுங்கள். கல்வி கொள்கைகளை மறு பரிசீலனை செய்யுங்கள். திராவிடியா மூடல் வேலையை நீங்க செய்யாதீங்க. ப்ளீஸ்..
விஜய்னா கோல்டு மெடலிஸ்ட். நிறைய டிப்ஸ் கொடுப்பார்
ஆனால் சில சூன்யங்களுக்கு மண்டையில் ஏறாதே
கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்புடைத்து
நல்ல கல்வியை இலவசமாக்குங்கள்
நமக்கு வேறு ஒன்றும் வேண்டாம்
ஆல் பாஸ் போடாமல், பன்னிரண்டாம் வகுப்பு வரை (அல்லது பாலிடெக்னிக் வரை) அனைத்து மாணவர்களும் படித்து முடிக்க வேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்த வேண்டும்.