பனி மூட்டம்: சுற்றுலா பயணியர் குதுாகலம்
வால்பாறை: வால்பாறையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்கிறது. பருவமழை துவங்கியுள்ள நிலையில் நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் பகல் நேரத்தில் பனிமூட்டம் நிலவுகிறது.
மழைப்பொழிவுக்கு இடையே வால்பாறை நகரில் பகல் நேரத்தில் குடியிருப்பு பகுதியை சூழ்ந்த பனி மூட்டத்தை, சுற்றுலா பயணியர் வெகுவாக கண்டு ரசித்தனர்.
இதேபோன்று, கவர்க்கல் பனிப்படரும் பகுதியில் பகலில் பெரும்பாலான நேரத்தில் பனிமூட்டமாக இருப்பதால், வால்பாறை வரும் சுற்றுலா பயணியர், அப்பகுதியில் நீண்ட நேரம் நின்று இயற்கையை ரசித்து செல்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement