அண்ணாமலை ராஜினாமா; பாஜ ஏற்பு
சென்னை: பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் ராஜினாமாவை பாஜ தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது. இதனை பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் உறுதி செய்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த, இரு ஆண்டுகளிலேயே, விஜய் ஆட்சியை பிடித்து முதல்வராகியுள்ளார். அதை பின்பற்றி தமிழக அரசியலில், புதிய பாதையில் பயணிக்க, அண்ணாமலை முடிவு செய்துள்ளார். இது குறித்த விபரத்தை, பா.ஜ., தலைமைக்கு தெரிவித்து, கட்சியிலிருந்து விலகுவதற்காக, கடந்த 1ம் தேதி, டில்லி சென்றார்.
பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய அமைப்பு பொது செயலர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை சந்தித்து, கட்சியில் இருந்து விலகும் முடிவை தெரிவித்தார். தற்போது பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் ராஜினாமாவை பாஜ தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு அண்ணாமலை சென்னை திரும்புகிறார்.
யார் இந்த அண்ணாமலை?
தமிழகத்தில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த கே.அண்ணாமலை, கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றினார். கர்நாடகாவை சேர்ந்த பா.ஜ.,வின் தேசிய அமைப்பு பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ் அழைப்பை ஏற்று, போலீஸ் பதவியை ராஜினாமா செய்து, 2020ல் பா.ஜ.,வில் இணைந்தார்.
2021ல்...
கடந்த, 2021 சட்டசபை தேர்தலின் போது, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆனாலும், அதே ஆண்டு ஜூலையில், தமிழக பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டார். மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்தும், நடைபயணம் சென்றும், பா.ஜ.,வை பலப்படுத்தினார்.
2024ல்...
கடந்த, 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, பா.ஜ., மேலிட தலைவர்கள் விரும்பினர். அதற்கு, அண்ணாமலை உடன்படவில்லை. அதனால், பா.ஜ., தனி அணி அமைத்து போட்டியிட்டு தோற்றது; கோவையில் போட்டியிட்ட அண்ணாமலையும் தோல்வியை தழுவினார்.
2025ல்...
சட்டசபை தேர்தலில் கூட்டணி சேர, அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ் வைத்த நிபந்தனை காரணமாக, தமிழக பா.ஜ., தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை, 2025 ஏப்ரலில் நீக்கப்பட்டார்; நயினார் நாகேந்திரன், அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.
2026ல்...
பிறகு கட்சி பணிகளில் பெரிய ஈடுபாடோ, ஆர்வமோ காட்டாமல், அண்ணாமலை ஒதுங்கியே இருந்த நிலையில் தற்போது பாஜவில் இருந்து விலகி உள்ளார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு: தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
லைவ் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
திரு அண்ணாமலை போன்ற படித்த அறிவுள்ள இளைஞரை பா ஐ க தமிழகத்திற்கு சரியான முறையில் பயன்படுத்தி கட்சியை வேரூன்றவைக்க தவறிவிட்டது அந்தக் கட்சி. இது அந்தக்கட்சிக்குத்தான் பெருத்த நஷ்டம். அந்தக்கட்சி தென் மாவட்டங்களில் நல்ல திறமை மிக்க வல்லமையான அந்தந்த மாநில மொழி பேசும் பேச்சாளர்களைக் கொண்டு அந்தக்கட்சியின் செயல்பாடுகளை மக்கள் மனங்களில் பதியும்படி செய்யத் தவறிவிட்டார்கள். இது பெரும் இழப்பு அவர்களுக்கு. பொய்யோ புரட்டோ தி மு க வில் இருக்கும் பேச்சாளர் களைப் போன்றவர்களை இனியாவது அடையாளம் கண்டு பா ஜ க கட்சியை தென் மாநிலங்களில் வளர்க்க பெருமுயற்சி எடுத்தால் தான் நல்லது.
அவப்பெயரை தேடிக்கொண்டது பி ஜே பி. எந்தஒரு காலத்திலும் தமிழ் நாட்டில் பி ஜே பி தலை காட்ட முடியாது. அண்ணாமலை ஒருவரால்தான் தமிழ் நாட்டில் பி ஜே பி பற்றி மக்களுக்கு தெரிந்து இருந்தது.
பாஜக விற்கு தமிழ்நாட்டில் மிகப் பெரிய பின்னடைவு இது. அண்ணாமலையை மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்கியதில் இருந்து பாஜக விற்கு சறுக்கல் ஆரம்பித்து விட்டது. இனி பாஜக வலுவாக கால் ஊன்ற 15 வருடங்கள் ஆகும்.
பா.ஜ.கவிற்குதான் நஷ்டம். இனி தமிழ்நாட்டில் பா.ஜ. க மீண்டும் வலுவாக கால் ஊன்றுவதற்கு சுமார் 15 வருடங்கள் ஆகும்.
அண்ணாமலை அவர்கள் பிஜேபியிலிருந்து விலகினார் என்பது அல்ல, அவர் பிஜேபியிலிருந்து விலக கட்சியின் மூத்த உறுப்பினர்கள் என்று தங்களை தாங்களே சொல்லிக்கொள்ளும் தமிழிசை, வானதி போன்றோர் இஷ்டத்துக்கு பேட்டி அளிப்பது, அண்ணாமலை அவர்களை மதிப்பதில்லை என்பதே உண்மை. கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு யாரை ஊடகங்களுக்கு பேச பிரிதிநிதியாக நியமித்து இருக்கிறார்களோ அவர்கள் தான் பேச வேண்டும். வேட்பாளர் பெயரே அரிவிக்காத நிலையில் தமிழிசை அவர்கள் எடப்படியார் வாகனத்தில் ஏறி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இனியாவது இவர்கள் திருந்த வேண்டும்.
how can we trust Annamalai, can he give statement that at any cost he will not go alliance with bJP in future?
டெல்லி B J P எடுத்த சரியான முடிவு கட்சியில் இருந்து கொண்டு கட்சியில் குடைச்சல் கொடுக்கும் ஒருவரை கட்சியில் வைத்து இருப்பது விட்டு வைப்பது கட்சிக்கு நல்லது இல்லை ஜெயலலிதா ஜி அதிமுக வில் அண்ணாமலை மாதிரி இருந்தால் ஜெயலலிதா ஜி உடனே கட்சியை விட்டு நீக்கி இருப்பார் கட்சிக்குள் இருந்து கொண்டு குடைச்சல் கொடுப்பவரை பிரச்சனை செய்பவரை கட்சியில் வைத்து இருக்க கூடாது டெல்லி B J P சரியான முடிவு எடுத்தது டெல்லி B J P க்கு வாழ்த்துக்கள்
கட்சியில் இருந்து கொண்டு....ஹி...ஹி...ஹி...தமிழ்நாட்டில் பாஜக என்ற ஒரு கட்சி இருப்பது நீங்கள் சொல்லித்தான் தெரியும்.
அண்ணாமலையை தலைமை நீக்க வில்லை. அவர் தான் ராஜினாமா செய்தார். இரண்டிற்கும் பெரிய வித்யாசம் உள்ளது.
உ பி கள் தனித்து விடப்பட்டுள்ளதால் புலம்போ புலம்பு தான். எல்லோரும் ஆந்திராவுக்கு ஓடி விடுங்கள்
ஆஹா... இரண்டு திராவிடமும் கதறுவது புரிகிறது. அதே போல தவேகவும் இப்போது கதறும் பாருங்கள். எவன் எவனோ அரசியலுக்கு வருகிறான்.. ஏன் படித்தவர் வரக்கூடாதா ? ரீல்ஸ் மற்றும் மீம்ஸ் போடுபவர்களுக்கு இனி நல்ல கன்டென்ட் கிடைக்கும். இனி எல்லா செய்தியாளர்களும் அண்ணாமலையை நோக்கி ஏவப்படுவார்கள். திராவிடம் திரைமறைவில் நன்றாக தனது ஆட்களை வைத்து வேலையைச் செய்யும்.
தமிழகம் வளமானதாக பாரதம் வலிமையானதாக மாற்ற வாழ்த்துக்கள்