ஓவர் குடிக்கு ஒருவர் பலி

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரம் விஜயா நகரில் வசித்தவர் சீனிவாசன், 41. மது பழக்கத்துக்கு அடிமையான இவரின் உடல்நிலை ஏற்கனவே பாதித்திருந்தது. தொடர்ந்து மது அருந்தி வந்ததால், மயக்கமான நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள், இறந்து விட்டதாக தெரிவித்தனர். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement