மாயமான சகோதரிகள் மேச்சேரியில் மீட்பு

சேலம்:சேலம், சூரமங்கலத்தை சேர்ந்த, 15, 14 வயதுடைய சகோதரிகள், நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்துடன் மாயமாகினர். அவர்களது பெற்றோர் அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில், ஜங்ஷன் அருகே இருசக்கர வாகனம் இருப்பதும், பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறி மேச்சேரி, வெள்ளாறில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றதும் தெரிந்தது. தொடர்ந்து அங்கு சென்ற போலீசார், சகோதரிகளை மீட்டு, உரிய அறிவுரை வழங்கி
பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement