மரக்கன்று நடும் விழா

அந்தியூர்:உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அந்தியூர் வனசரக அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. ரேஞ்சர் நந்தினி மரக்கன்று நடவு செய்தார்.


நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்தியூர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து ஓவியப்போட்டி நடத்தி, சிறந்த ஓவியத்துக்கு, பரிசு வழங்கி ரேஞ்சர் பாராட்டினார். நிகழ்வில் பாரஸ்டர் ஈஸ்வரமூர்த்தி, வன பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement