திருடியவருக்கு நுாதன தண்டனை

திருப்பூர் எம்.ஜி.ஆர். நகரில் கடந்த 2024 டிசம்பரில் ஜெய்லாணி என்பவரின் பசு மாடுகளைத் திருடியதாக பாரூக், 46 என்பவரை வடக்கு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். வழக்கை விசாரித்த திருப்பூர் முதலாவது குற்றவியல் கோர்ட் நீதிபதி செந்தில் ராஜா, குற்றவாளி பாரூக்கிற்கு 2 ஆண்டுகள் நன்னடத்தை அலுவலரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ஹேமா மகேஸ்வரி ஆஜராகி வாதாடினார் .

Advertisement