நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

செய்யூர், ஜூன் 8–-

செய்யூர் பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது.

செய்யூர் குளக்கரை பகுதியில் நாகாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை புணரமைத்து கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்து, கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணி மேற்கொண்டனர்.

திருப்பணி முடிந்து கடந்த 5ம் தேதி கும்பாபிஷேக விழாவிற்கான பூஜைகள் தோடங்கின.

கணபதி பூஜை கோ பூஜை, லட்சுமி பூஜை என விசேஷ பூஜைகள் செய்யப்பட்டது.

இதையடுத்து முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நேற்று காலை 8:00 மணிக்கு நடந்தது. விமான கலசம் மற்றும் மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் திரண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement