காவிரியாற்றில் மூழ்கி பிக்கப் வேன் டிரைவர் பலி

ஒகேனக்கல்; சுற்றுலா வந்த பிக்கப் டிரைவர் காவிரியாற்றில் மூழ்கி பலியானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள ஆவளபள்ளி, தோட்டக்கரி பகுதியை சேர்ந்தவர் பண்டரிநாதன். இவரது மகன் குமார், 35. ஓசூரி-லுள்ள தனியார் கம்பெனியில் பிக்கப் வாகன டிரைவராக பணியாற்றி வந்தார். அங்கு உடன் பணியாற்றும் நண்பர் குமரேசனுடன் நேற்று, ஒகேனக்கல்லுக்கு மகேந்திரா பிக்கப் வாகனத்தில் சுற்றுலா வந்தனர்.

ஊட்டமலை ஐயப்பன் கோவில் தெருவில் பிக்கப் வாகனத்தை நிறுத்தி விட்டு, பரிசல் துறைக்கு அருகே காவிரியாற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது, குமார் ஆழமான பகுதியில் குளித்த போது, தண்ணீரில் மூழ்கி மாயமானர். தகவலறிந்த ஒகேனக்கல் தீயணைப்பு படை வீரர்கள், உள்ளூர் வாசிகளின் உதவியோடு, குமாரை சடலமாக மீட்டனர். ஒகே-னக்கல் போலீசார், விசாரித்து வருகின்றனர்.

Advertisement