போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது; சொல்கிறார் உதயநிதி
சென்னை: பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது சிஎம் சார் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விமர்சனம் செய்துள்ளார்.
அவரது அறிக்கை: தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழகம் ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதல்வர், டில்லியில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்தில், தமிழகத்தின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழகம் இருக்கிறது, இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 சதவீதம் மகளிர் தமிழகத்தை சேர்ந்தவர்கள், பெண் கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம், மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதல்வர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதல்வர் விளக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர்.
இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார். டில்லி வரை சென்றவர், நிடி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்னை பற்றி வாய் திறக்காமல் நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிடி ஆயோக் கூட்டத்தில் திமுக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது SofaModel அரசு. பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது சிஎம் சார்உண்மை நிச்சயம் வெல்லும். இவ்வாறு உதயநிதி கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (5)
KayD - Mississauga,இந்தியா
12 ஜூன்,2026 - 19:36 Report Abuse
உதவாதநிதி .... 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
12 ஜூன்,2026 - 19:24 Report Abuse
ஆட்சி மாற்றம் கண்டும் அகங்காரம் மட்டும் இன்னமும் இவருக்கு குறையவே இல்லை எழிதிக்கொடுத்து
வீட்டில் படிபடி என்று துன்புறுத்தி இவருக்கே எண்ணத்தைத்தான் படிக்கிறோம் என்றே தெரியாமல் கக்குகிறார் அந்தக்கோ பாவம் பரிதாபம் இவர்பாட்டுக்கு சினிமா தொழிலை நடத்தி வந்தார் அவரை அரசியலுக்கு இழுத்து கடைசியில் இவர்க்கு சினிமா தொழிலும் போச்சு அரசியலும் போச்சு இரண்டம் கெட்டானாக திகழ்கிறார் என்ன செய்வது அப்பன் சொல்வதை கேட்டுத்தான் ஆகவேண்டும் ஆட வேண்டும் 0
0
Reply
sasidharan - coimbatore,இந்தியா
12 ஜூன்,2026 - 14:11 Report Abuse
ஐயோ இவர்களுக்கு யார் சொல்லிக்கொடுப்பது , உங்கள் ஆட்சியின் மீது வெறுப்பு ஏற்பட்டதன் விளைவுதான் ஆட்சி மாற்றம் என்பதை . மக்கள் தெளிவாக உள்ளார்கள் , இனியும் ஏமாற்ற முடியாது சின்னவரே 0
0
Reply
Dum - ,இந்தியா
12 ஜூன்,2026 - 13:51 Report Abuse
ஏதாவது சொல்லவேண்டுமே என்று பேசிய பேச்சு 0
0
Reply
Bala - Dubai,இந்தியா
12 ஜூன்,2026 - 13:25 Report Abuse
அவர்கல் பெற்றது போலியென்றால் நீங்கள் பெற்றது எப்படி கூறுவது, ஒரு ஓட்டுக்கு 1000 முதல் 10000வரை கொடுத்து பெற்றதை என்ன சொல்ல. ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் உங்களால் ஒரு தொகுதிக்கு 1000 ஒட்டு வாங்கமுடியததை ஒப்புக்கொள்வீரா . 0
0
Reply
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்
Advertisement
Advertisement