சிங்கப்பெண் அதிரடிப்படையை நாளை துவங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்

9


சென்னை: குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிங்கப்பெண் அதிரடிப்படையை நாளை (ஜூன் 09) மாலை 5 மணிக்கு முதல்வர் விஜய் துவக்கி வைக்கிறார்.

மகளிர், சிறுமியர் பாதுகாப்புக்காக, காவல் துறையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இப்படைக்கு, ஐ.ஜி.,யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதை தொடர்ந்து, நவீன், திவ்யதங்கம் ஆகிய இரண்டு எஸ்.ஐ.,க்கள் உட்பட, 18 போலீசார் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்கள், பஸ் நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தகவல் தொழிநுட்ப பூங்காக்கள் என, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிங்கப்பெண் அதிரடிப்படையை சென்னை, ராஜரத்தினம் மைதானத்தில் நாளை (ஜூன் 09) மாலை 5 மணிக்கு முதல்வர் விஜய் துவக்கி வைக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

Advertisement