சிறுமியை கர்ப்பமாக்கிய 2 பெயின்டர்கள் சிக்கினர்

1

வேலுார்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கிய பெயின்டர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.

வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள பகுதியை சேர்ந்த, 14 வயது சிறுமிக்கு, சில நாட்களுக்கு முன், உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை, வேலுார் அரசு மருத்துவமனைக்கு, உறவினர்கள் அழைத்து சென்றனர்.

பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினர். சிறுமியின் பெற்றோர் புகாரில், வேலுார் மகளிர் போலீசார் விசாரித்தனர்.

அதில், அணைக்கட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பெயின்டர்களான காதர் பாட்சா, 47, இதயத்துல்லா, 22, ஆகியோர், சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து, ஆசை வார்த்தை கூறி, பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கியது தெரிந்தது.

இதையடுத்து, காதர் பாட்ஷா, இதயத்துல்லா ஆகிய இருவரையும், போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement