யூடியூபர் மாரிதாஸ் கைது
மதுரை: அமைச்சர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசு குறித்தும், முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பற்றியும் யூடியூபர் மாரிதாஸ் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்தார். அமைச்சர் கீர்த்தனா தொடர்பாக அவர் வெளியிட்ட படம், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது என்று பலரும் புகார் தெரிவித்தனர். அமைச்சர்கள் ஆதவ் உள்ளிட்டோர் மீதும் அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வந்தார்.
இந்த நிலையில், மதுரையில் உள்ள வீட்டில் இருந்த மாரிதாஸை சென்னை சைபர் கிரைம் போலீசார் இன்று கைது செய்தனர். அவரை விசாரணைக்காக போலீசார் சென்னை அழைத்துச் சென்றனர்.
@block_Y@
இதுதான் மாற்று அரசியலா?
பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை; தவெகவின் “ரீல்ஸ் மாடல்” அரசின் ரியல் முகத்தை மக்களுக்கு விளக்கிக் கூறிய ஒரே காரணத்திற்காக சமூக ஊடகவியலாளர் மாரிதாஸை தடாலடியாக கைது செய்திருக்கும் முதல்வர்ஜோசப் விஜயின் அராஜகம் கடும் கண்டனத்திற்குரியது. தங்கள் நிர்வாகத்தின் மீதான சாதாரண விமர்சனங்களைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவது தான் தவெக முன்மொழிந்த மாற்று அரசியலா? ஆட்சி மாறினாலும் அவலங்கள் மாறவில்லை என்பதை போல, திமுகவிற்கு மாற்று சக்தி என்று கூறி மக்கள் மனதைக் கலைத்து ஆட்சிக்கு வந்து விட்டு, பொதுமக்களின் ஜனநாயகக் குரல்வளையை நெறிப்பதில் திமுகவை விட தவெக அசுர வேகத்தில் செயல்படுவது வெட்கக்கேடானது. எனவே, கைது செய்யப்பட்ட திரு. மாரிதாஸ் அவர்களை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! திமுகவைப் போலவே காவல்துறையை தங்கள் கைக்கூலிகளாகப் பயன்படுத்தி, பொதுமக்களின் கருத்து சுதந்திரத்தை அபகரிக்க தவெக அரசு முயல்வதை தமிழக பாஜ ஒருபோதும் அனுமதிக்காது!, என குறிப்பிட்டுள்ளார்.block_Y
ஆள் மாற்றம் ஆனால் ஆட்சி மாறவில்லை. சட்டம் சிறையில். அராஜகம் கையில். தகுதிக்கு மீறிய பதவிகள்.
பத்திரிக்கை சுதந்திரம் என்பது தன்னை பாதிக்கும் போது மாறுவது சரியானதல்ல. கைது செய்யாமல் வழக்கு தொடர்ந்து, இழப்பீடு கேட்பது தான் முறை.
அவதூறு வழக்கிற்கு கைது செய்ய தேவையில்லை. அவர் ஒன்றும் அமைச்சரின் ஆபாச படத்தை AI துணை கொண்டு உருவாக்கவில்லை. அவர் லாட்டரி குடும்பத்தை பற்றி கடுமையான விமர்சனம் வைத்தார். கோபாலபுர குடும்பம் இல்லாத குறையை இனி லாட்டரி குடும்பம் தீர்த்து வைக்கும் போல் தெரிகிறது. பாசிசம் பற்றி பேசிய விஜய் இப்போது செய்வது என்ன பாயாசமா? மொத்தத்தில் பழைய மொந்தையில் புதிய கள்.
மாரிதாஸ் பேசியது தமிழ் நாடு நலன் சம்பந்தப்பட்டது. முதலில் அரசாங்கம் அவர் சொல்வது உண்மையா பொய்யா என்று சொல்லணும். இப்படி நாட்டின் நலன் கருதி பேசினால் கைது செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. மார்ட்டின் திருட்டு லாட்டரி சிட்டுக்கு கைது செய்யப்பட்டவர். அவரையும், அவர் குடும்பத்தைபேசினால் ஏன் இவர்களுக்கு கோபம் வருகிறது. இப்போ இந்தியாவில் போதை பொருள் அதானியின் போர்ட்டில் தான் அதிகம் பிடிபடுகிறது. இது போல் தமிழக போர்ட்களிலும் நடக்கிறதாம். இதை ஆராய்ந்து செயல் படுவதை விட்டு இப்படி செயல் படுவது நாட்டுக்கு நன்மை தராது.
மாரிதாஸ் சொன்னதெல்லாம் உண்மையா என்பது நம்மை போன்ற சாதாரண மக்களுக்கு தெரியாது.. ஆனால், மத்திய அரசுக்கு நிச்சயம் உண்மை தெரியாமல் இருக்காது... மத்திய அரசு, திராவிஷ மாடல் ஆட்சியிலும் அமைதி காத்தது... இப்பொழுதும் அதே....
It is nice now very clear that Shri. Vijay is not the actual Chief Minister of the State.
இட் ஐஸ்
From Fire to Frying PAN என்று சொல்வார்கள்.. அந்த நிலைமை ஆகிவிட்டது தமிழக மக்களுக்கு... தமிழகம் நல்லாட்சி என்பதை கனவில் கூட பார்க்காது போல இருக்கிறது...
ஹாலேலூயா அரசு.வலுக்கும் கண்டனங்களைக் கண்டுகொள்ளாத அரசு.தனக்குத் தானே சவக்குழியைத் தேடுகிறது.டோப்பா அடக்குமுறையை சவுக்கு சங்கர் எதிர்த்தார்.அவர் உள்ளே வைக்கப்பட்டார்.ஒரே குட்டையில் ஊறிய திராவிஷ மட்டைகள்.
திராவிஷ ஆட்சிக்கு சற்றும் சளைத்தது அல்ல புதிய ஆட்சி.. மத்திய அரசு திமுக காலம் தொட்டு தொடர்ந்து வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு வருகிறது..மேலும்
-
தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி/ சாய்வுத்தளம் அமைக்கும் பணி துவக்கம்
-
குப்பை தொட்டியாக மாறும் தேனி நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம்
-
இடிந்து விழுந்த அங்கன்வாடி மையம்
-
பிரச்னையும் தீர்வும் பகுதிக்காக... அவசரகதியில் திறக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் நிழற்குடை , கழிப்பறை இன்றி பரிதவிக்கும் மக்கள்
-
பேனர் செய்தி
-
தொடர் மழை, பலத்த காற்றால் மேகமலை செல்ல கட்டுப்பாடு