காரைக்குடி டீக்கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு

1

காரைக்குடி: காரைக்குடி டீக்கடையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி சேர்வார் ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் சந்தானகுமார் 50. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. சந்தானகுமாரின் தாயார் வீட்டின் எதிரே டீக்கடை நடத்தி வருகிறார். தனது மகன் சந்தானகுமாரிடம் அடிக்கடி பிரச்சனை செய்பவர்களை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் நேற்று இரவு டீக்கடையில் பெட்ரோல் குண்டு வீசினர்.

இதுகுறித்து காரைக்குடி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சேர்வார் ஊரணியை சேர்ந்த அசோக், மணிசரண், சபரி, அமீர் ஆகிய நான்கு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்குடியில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement