நாய் தொல்லையால் மக்கள் அவதி

சங்கராபுரம்: சங்கராபுரம் நகரில் நாய் தொல்லையால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சங்கராபுரம் பேருராட்சியில் 15 வார்டு பகுதியில் அதிக அளவில் தெரு நாய்கள் உள்ளது. இந்த நாய்கள் இரவு நேரங்களில் தெருவில் நடந்து செல்வோரை துரத்தி கடிக்க முற்படுவதால், மக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். பகலில் தனியாக செல்லும் சிறுவர்களை விரட்டி சென்று கடிக்கும் சம்பவம் தொடர்கிறது. நாளுக்கு நாள் சங்கராபுரம் நகரில் அதிகரித்து வரும் நாய் தொல்லையால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாய் தொல்லையை கட்டுப்படுத்த பேருராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement