பூட்டை சாலையில் டிராபிக் ஜாம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
சங்கராபுரம்: சங்கராபுரம் பூட்டை சாலையில் தொடரும் டிராபிக் ஜாமால் வாகன ஓட்டிகள்,பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சங்கராபுரம் பூட்டை சாலையில் பஸ் நிலையம் உள்ளது. இச்சாலையில் உள்ள கடைகள் முன்பு இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பஸ்கள் எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிட முடியாமல் சாலையில் இரு புறமும் வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளதால் போக்குவரத்து தினசரி ஸ்தம்பிக்கிறது.
போக்குவரத்தை சரி செய்ய போக்குவரத்து போலீசார் இல்லாததால் உள்ளுர் போலீசார் காலதாமதமாக வருகின்றனர். தினசரி பூட்டை ரோடில் தொடரும் டிராபிக் ஜாமால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாகன ஓட்டிகள் தங்கு தடையின்றி செல்ல உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement