சிறுவாணியில் 80 மி.மீ. மழை: மெல்ல உயர்கிறது நீர் மட்டம்
கோவை: மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் தென்மேற்கு பருவ மழை பெய்யத் துவங்கியிருக்கிறது. சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மே 30 முதல் மழை காணப்படுகிறது.
காலை 8 மணி நிலவரப்படி அணை பகுதியில் 80 மி.மீ. அடிவாரத்தில் 31 மி.மீ. பதிவானது. நீர் மட்டம் 9.81 அடியாக (மொத்த உயரம் 50 அடி) உயர்ந்திருக்கிறது.
பருவ மழை பெய்யத் துவங்குவதற்கு முன், 7.50 அடியாக நீர் மட்டம் குறைந்திருந்தது. ஒரு வாரமாக தினமும் பெய்து வரும் மழையால் மெல்ல மெல்ல நீர் மட்டம் உயர்கிறது. குடிநீர் தேவைக்காக 4.47 கோடி லிட்டர் எடுக்கப்பட்டது.
மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு:
சின்கோனா - 94, சின்னக்கல்லார் - 124, வால்பாறை - 43, சோலையார் - 78, போத்தனுார் - 4.80, வாரப்பட்டி - 4 கிணத்துக்கடவு - 3, தொண்டாமுத்துார் - 2 மி.மீ. பதிவாகி உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அரசு உறுதி அளிக்க வலியுறுத்தல்
-
சீரமைத்த ஒரே ஆண்டில் சேதமான சாலை ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை பாயுமா...?
-
கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்!
-
நீண்ட கால பிரதமர் மோடி; கோவில்களில் மத்திய அமைச்சர்கள் சிறப்பு பூஜை
-
பா.ஜ., பிரமுகர் அலிஷா அப்துல்லா குறித்து ஆபாச பேச்சு; யூடியூபர் முக்தார் கைது
-
கோவை சிறுமி கொலை வழக்கு; 21 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்
Advertisement
Advertisement