அரசுக்கு தபால் அட்டை அனுப்பிய அலுவலர்கள்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் கடந்த ஆட்சியில் கொண்டு வந்துள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி முதல்வர் விஜய்க்கு தபால் அட்டையில் கோரிக்கையை அரசு அலுவலர்கள் அனுப்பி வருகின்றனர்.
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் மாநில செயலாளர் விஜயகுமார் தலைமையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தபால் அட்டையில் கோரிக்கையை அனுப்பினர்.
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செய்யதலி ஹவாமா உட்பட 50 அலுவலர்கள் பங்கேற்றனர். இதுபோன்று பிற ஊராட்சி ஒன்றியங்கள், அரசு அலுவலகங்களிலும் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் முதல்வருக்கு கோரிக்கை அட்டையை அனுப்பி வருகின்றனர்.––––––
மேலும்
-
டொயோட்டா 'இன்னோவா கிரிஸ்டா' வெளிப்புற டிசைன், புதிய அம்சங்கள் சேர்ப்பு
-
கூட்டுறவு அதிகாரிகளை கண்டித்து 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்
-
13 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் காஞ்சி மருத்துவமனை நுழைவாயில்; நோயாளிகள் அவதி
-
ரயில்வே ஸ்டேஷனில் சோதனை
-
டஸ்டர் 1 லிட்டர் டர்போ மைலேஜ்
-
இஸ்ரேலிய குடியேறிகள் மீது பிரிட்டன் உள்ளிட்ட 5 நாடுகள் பொருளாதார தடை