'டாஸ்மாக்' மது விற்பனையை தனியார்மயமாக்க பேச்சு துவக்கம்
- நமது நிருபர் -
'தமிழக அரசின் மது விற்பனையை தனியாரிடம் வழங்குவது குறித்து, அதிகாரிகள் தரப்பில் முதல்கட்ட பேச்சு தொடங்கி உள்ளது.
ஆலோசனை
இந்நிலையில், அண்டை மாநிலங்களில் உள்ளதுபோல் மது விற்பனையை தனியார்மயமாக்க, உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது .
இது குறித்து, தலைமை செயலகத்தின் உயர் அதிகாரிகள் சிலர் கூறியதாவது: தமிழக அரசின் கீழ் உள்ள 'டாஸ்மாக்' நிறுவனம் வழியே, தமிழகம் முழுதும் மது விற்பனை செய்யப்படுகிறது. மாதம் சராசரியாக 50 லட்சம் பெட்டி மது வகைகள், 35 லட்சம் பெட்டி பீர் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
எந்த மது அதிகமாக விற்பனையாகிறதோ, அந்த மதுவை டாஸ்மாக் நிறுவனம் அதிகமாக கொள்முதல் செய்யும் நடைமுறை உள்ளது.
இதனால், மது உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் நிறுவனத்தில் தயாராகும் மதுவை அதிகமாக விற்பனை செய்ய, டாஸ்மாக் ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து, 'கவுன்டர் சேல்ஸ்' செய்ய வைத்து, கொள்முதலை அதிகப்படுத்துகின்றன.
டாஸ்மாக்கை பொறுத்தவரை, மது உற்பத்தி முதல் விற்பனை செய்யும் வரை, எல்லா படிநிலையிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது.
சிண்டிகேட்
இதை சரி செய்வது சாதாரண விஷயமில்லை. எனவே, அண்டை மாநிலங்களில் உள்ளதுபோல் மது விற்பனையை தனியார்மயமாக்க, அரசு கொள்கை முடிவு எடுக்க தயாராகி உள்ளது. அதற்கான முதல்கட்ட பேச்சு சமீபத்தில் நடந்தது.
இதில், டாஸ்மாக், உள்துறை, நிதி துறை, மது விலக்கு ஆயத்தீர்வை உள்ளிட்ட துறை அதிகாரிகள், முதல்வர் அலுவலக அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், ஐந்து முன்னெடுப்புகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத் தவரை மது உற்பத்தியில் 11 நிறுவனங்கள், பீர் உற்பத்தி யில் ஐந்து நிறுவனங்கள் ஈடு பட்டு வருகின்றன. இந்த சிண்டிகேட்டை உடைத்து, பெரிய சந்தையை உருவாக்க வேண்டும்.
பல மாநிலங்கள், நாடுகளின் மதுவை உள்ளே கொண்டு வர வேண்டும். வரி குறைப்பு செய்ய வேண்டும். போலி மதுவை ஒ ழிக்க வேண்டும். கொள்முதல் முதல் விற்பனை வரை ஊழலை ஒழித்து, அதை முறையாக கண் காணித்தாலே, அரசுக்கு கெட்டபெயர் இல்லாமல் வருவாய் அதிகரிக்கும் என முடிவெடுக்கப்பட்டு உள்ளது .
அதிருப்தி
மது விற்பனையை தனியார்மயமாக்குவதால், அரசின் மீது அதிருப்தி ஏற்பட வாய்ப்புள்ளது. இதை சரி செய்ய, 'மதுவை அரசு விற்பது சரியாக இருக்காது' என முதல்வர் விஜய் பேச வேண்டும் என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எனினும், கூட்டத்தில் இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முதல்வருடன் கலந்தாலோசித்து, இறுதி முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
உலகம் முழுதும் மது விற்பனை தனியாரிடம்தான். தமிழ்நாட்டில் கொள்ளையடிக்க உருவாக்கப்பட்டதுதான் டாஸ்மாக்
கொழந்தே, மொத்த சாராய கொள்முதலுக்கு TASMAC க்கை உருவாக்கியது புர்ச்சி தலைவர் எம்ஜிஆர். அதை TASMAC கடைகள் மூலம் சில்லறை விற்பனை செய்ய சட்டம் கொண்டு வந்தது உங்களவா, புர்ச்சித் தலீவி ஆயாம்மா தான். நன்னா திட்டுங்கோ, எங்கே ஓடறேள் சித்த நில்லுங்கோ.
இதுதான் லாட்டரி கும்பலின் முக்கியமான டிமான்ட் அல்லது கட்டளை. சத்தமில்லாம சுத்தமா தமிழகம் திவாலாகக்கூடும்.
இதே லாட்டரி கும்பல் சென்னையில் டீசல் டேங்க் கட்டிடம் கட்டியபோது நீங்கள் நவதுவாரங்களை மூடிக்கொண்டிருந்தது ஏன்?
ஆம் முறைகேடுகளை களையெடுக்க முடியாது என்பதால் அரசையும் தனியார் வசம் ஒப்படைக்கலாம்... இவர்கள் ஓய்வு எடுக்கலாம்
2003ல் சில்லறை மதுக்கடைகளை அதாவது இன்றைய டாஸ்மாக் கடைகளை தமிழகஅரசே வீதிக்கு வீதி திறந்த பின்னர்தான் தமிழ்நாட்டில் மது அருந்துவோர் எண்ணிக்கை எக்குத்தப்பாக எகிறிப் போனது.அதிக ஊழல், கமிஷன், வேண்டிய சரக்கை கொள்முதல் செய்வது, 10, 20 ரூ கூடுதல்கள், கலால் வரி கட்டாமல் சரக்கை விற்பது, மட்டமான தமிழ்நாட்டு மது ஆலைகள் சரக்கை குடித்து குடிமகன்கள் அற்பாயிலில் போவது இவை எல்லாமே அரசே மது விற்க ஆரம்பித்த பிறகு உருவானவைகள்தான் இவற்றைத் தவிர்க்க தனியார் மயமாக்கம் ஒன்றே தீர்வாகும். வேலை செய்யும் ஊழியர்களுக்கு மாற்று வழி ஏற்பாடு செய்து விட்டு அரசு உடனடியாக இதை செய்ய வேண்டும். சென்ற தி.மு.க ஆட்சி இம்முறை வீழ்ந்திட டாஸ்மாக்கில் நடைபெற்ற குளறுபடிகளும் முக்கிய காரணமாக அமைந்தது என்பதை இன்றைய அரசு உணர வேண்டும்.
டாஸ்மாக்கை தனியார் மயமாக்கினாலும் குடிப்போதையை ஒழிப்பது கடினம் இந்த குடிப்போதையை ஒழிப்பேனென்று தவறான சிகிச்சை அளிக்கும் திருச்சி ஆத்மா மனநல மருத்துவமனைகள், காப்பகம் மற்றும் கரூர் விடியல் மருத்துவமனைகளுக்கு சென்று சேர்வதை தவிர்க்க வேண்டும் இல்லையேல் ஏதோ ஒன்றிற்கு அடிமையாக்கப்படுவார்கள்...
ஆம் ஆத்மீ கட்சி டில்லியில் பண்ணியது, தெலுங்கானாவில் பிஆர்எஸ் கவிதா இப்படி ஈடி வழக்கு போட்டது இந்த பாலிசிக்காக தானே? லாட்டரி எல்லாத்தையும் சமாளிச்சிடுவார். வாஷிங் மெஷின் கட்சிக்கு பங்கு போகும் அல்லவா?
தூய பரிசுத்த ஆட்சி. சாராய லாபத்தை அரசு கஜானாவிலிருந்து லாட்டரி கஜானாவுக்கு திருப்பி கொள்ளையடிக்க திட்டமா ? பத்து ரூபாய் கமிஷன்னு பாட்டு பாடிட்டு இப்போ மொத்தமா ஆட்டையை போட லாட்டரி மாபியா ஒரு தற்குறியை வைத்து பிளான் பண்ணுது.
யாரும் குடிக்க சொல்லி கட்டாயப்படுத்த வில்லையே??
உண்மையில் விளம்பரங்கள் இல்லாமல் நடைபெறு வியாபாரமிது??
குடி நாட்டுக்கு???
வீட்டுக்கு உயிருக்கு கேடு
குடி குடியை கெடுக்கும் என்று தெரிந்தே குடிக்கிறார்கள் ??
தடுப்பது ஜனநாயக விரோதம்.
அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்.
அடுத்தவர்களை நொள்ளை நொட்டை சொல்வதையாவது நிறுத்துங்கள்.
குடிக்கு அடிமையான பிறகு மனைவி சொன்னால்கூட கேட்க மாட்டானுவ. இறக்கும் போதுகூட குடிப்பான் இவர்களை திருத்த வேண்டும் அது புதிய அரசின் கடமை. அதை விடுத்து தனியாருக்கு விற்க முயல்வது துரோகம். மதுவிலக்கை கொண்டு வந்தால் குறைந்தது 50சதவீத குடிகாரனுவ குடிப்பது குறையும்
கோவையில் அணிகள் பேசசுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிற்றன. ஒரு மது ஆலையை வாங்க லாட்டரி துடிப்பதாக தகவல். தனியாரிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதாவது சரக்குகள் தமிழ்நாடு அரசின் கிடங்கில் இருந்து அரசின் கடைகளுக்கு சென்று விற்பனை செய்வதற்கு பதில் தனியார் கடைகளுக்கு சென்று விற்பனையாகும், ஆக மொத்தம் சாராயம் விற்பனை நிற்காது. அரசுக்கு வரவேண்டிய லாபத்தில் ஒரு பங்கு தனியாருக்கும் செல்லும் அவ்வளவே.