கத்தியை காட்டி மக்களை மிரட்டிய வாலிபர் கைது
புதுச்சேரி: கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
லாஸ்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, லாஸ்பேட்டை, இடையன்சாவடி ரோட்டில் கத்தியுடன் ஒரு வாலிபர் பொதுமக்களை மிரட்டி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்றபோது, அவர் தப்பிக்க முயன்றார். அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில், லாஸ்பேட்டை, சாமிப்பிள்ளை தோட்டத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் தமிழ்மணி, 24, என்பது தெரியவந்தது.
அவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., - த.வெ.க., தான் பா.ஜ.,வின் கொள்கை எதிரிகள்: அமித்ஷா பேச்சு
-
இடுக்கியில் பன்றிக்காய்ச்சல் பலி எல்லையில் முகாம் அமையுங்கள்
-
மருத்துவமனையில் மாணவர் கவலைக்கிடம் தவறான சிகிச்சை காரணம் என ஆர்ப்பாட்டம்
-
மண்டல பூஜை
-
தலைமை ஆசிரியருக்கு சான்றிதழ் வழங்கல்
-
காரைக்கால் கோவிலில் சிலையை அவமதித்த நபருக்கு போலீஸ் வலை
Advertisement
Advertisement