தலைமை ஆசிரியருக்கு  சான்றிதழ் வழங்கல் 

கடலுார்: மேற்கு ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

கடலுார் அடுத்த மேற்கு ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, 2025-26ம் கல்வியாண்டில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.

இதனை முன்னிட்டு, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் எல்லப்பனுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

முதன்மைக் கல்வி அதிகாரி ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

Advertisement