மேட் இன் இந்தியா ஏர்பஸ் சி 295 விமானத்தின் முதற்கட்ட சோதனை வெற்றி
நமது சிறப்பு நிருபர்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சி-295 ராணுவப் போக்குவரத்து விமானத்தின் முதற்கட்ட சோதனை வெற்றி அடைந்தது என இந்திய விமானப்படை தெரிவித்து உள்ளது.
விமானப்படைக்காக ஏர்பஸ் மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனங்களின் கூட்டு முயற்சியின் கீழ் இந்தியாவில் சி295 போக்குவரத்து விமானம் தயாரிக்கப்படுகிறது. இது நாட்டின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தித் திட்டத்தில் ஒரு மைல்கல் ஆக பார்க்கப்படுகிறது.
இந்த விமானத்தின் முதற்கட்ட சோதனை வெற்றி அடைந்தது என இந்திய விமானப்படை தெரிவித்து உள்ளது. 9,000 கிலோ வரை சுமையைச் சுமந்து செல்லும் திறன், 24 ஸ்ட்ரெச்சர்களை வைக்கும் இடவசதி உள்ளிட்ட பல்வேறு பிரத்யேக வசதிகளுடன் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
வெற்றிகரமான முதற்கட்ட சோதனைக்கு குழுவினரை இந்திய விமானப்படை பாராட்டியுள்ளது. இது குறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள பதிவில், ''இந்தச் சாதனை, இந்தியாவின் வளர்ந்து வரும் விண்வெளி திறன்களை வலுப்படுத்துவதோடு, உள்நாட்டு பாதுகாப்பு திறனை வளர்ப்பதில் இந்திய விமானப்படையின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது'' என குறிப்பிட்டுள்ளது.
"எங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள இந்திய விமானப்படை, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய அரசுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் இந்திய விண்வெளித் துறையின் எதிர்காலத்தைக் கட்டமைக்கிறோம்," என்று ஏர்பஸ் டிபென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாழ்த்துக்கள். இந்த வெற்றி, அடுத்த கட்டமாக பொது போக்குவரத்து துறையிலும் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
வாழ்த்துக்கள் .சரக்கு போக்குவரத்து விமானமாகவும் உதவும் .
வாழ்க பாரதம் . நிச்சயமாக இது நம் அனைவருக்கும் மிகவும் பெருமையான மற்றும் மகிழ்ச்சியான தருணம்.
வாழ்த்துக்கள்.
Congratulations. Many more success in the coming days.
காங்கிரதுலேஷன்ஸ்.
parattukal
மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியா பொதுப் போக்குவரத்துக்குப் பயன்படும் வகையில் விமானங்களைத் தயாரிக்க வேண்டுமென மனமார வாழ்த்துகிறேன்.