முதல்வர் விஜய் தங்கியிருந்த டில்லி தமிழ்நாடு அரசு இல்லத்தில் தீ விபத்து
புதுடில்லி: டில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு அரசு இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் டில்லி சென்றுள்ளார். நேற்று அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து பேசினார். தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோரை சந்தித்து பேசினார்.
அதன்பிறகு, டில்லியில் உள்ள தமிழக அரசு இல்லத்தில் முதல்வர் விஜய் ஓய்வு எடுத்தார். இன்று நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், முதல்வர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு அரசு இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள உணவகத்தில் அனைவரும் அமர்ந்து சாப்பிடும்போது இந்த தீபத்து ஏற்பட்டுள்ளது.
புகைமூட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் வேகமாக வெளியேறினர்.உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
யார் இந்த கேவலமான நாச வேலையை செய்தது?
இந்தப் பிரச்சனைக்கும் திருட்டு முன்னேற்றக் கழகத்தை சேந்தவனாத் தான் இருப்பான்மேலும்
-
பயன்பாட்டில் இருக்கும் 36 ரபேல் விமானங்கள்; பாகிஸ்தானின் பொய் மீண்டும் அம்பலம்
-
எங்களுக்கு இதெல்லாம் தெரியாது; பட்டியல் வாசித்த முதல்வர் விஜய்
-
'எங்கப்பா... உங்க அப்பாவை காணோம்!'
-
திமுக ஆட்சியில் வெளியிட்ட 500 மின்சார பஸ் கொள்முதல் டெண்டர்; ரத்து செய்தது தவெக அரசு
-
இந்தியா உடனான முக்கிய வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டம்; அமெரிக்கா தகவல்
-
இறைச்சி கழிவை மீண்டும் வெள்ளலூரில் கொட்ட முடிவு