இன்று 3வது விக்கெட்; மம்தா கட்சி ராஜ்யசபா எம்.பி.,க்கள் அடுத்தடுத்து ராஜினாமா

12


கொல்கட்டா: திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூன்றாவது ராஜ்யசபா எம்.பி., இன்று ராஜினாமா செய்தார்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் தோல்வியால், முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., உட்கட்சி பூசலால் சிதறி வரும் நிலையில், அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி.க்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். கடந்த 8ல், திரிணமுல் காங்., ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த சுகேந்து சேகர் ராய், எம்.பி., பதவியை ராஜினாமா செய்ததோடு, கட்சியில் இருந்தும் விலகினார்.

திரிணமுல் காங்கிரசின் மற்றொரு ராஜ்யசபா எம்.பி.,யான சுஷ்மிதா தேவ், 53, நேற்று தன் பதவியை ராஜினாமா செய்ததோடு, கட்சியில் இருந்தும் விலகினார். இந்நிலையில் இன்று ராஜ்யசபா எம்.பி. பிரகாஷ் சிக் பராக் தனது பதவியை ராஜினாமா செய்ததால், திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டது.

பிரகாஷ் சிக் பராய்க்கின் ராஜினாமாவைத் தொடர்ந்து, ராஜ்யசபாவில் கட்சியின் பலம் 10 எம்.பி.க்களாகக் குறைந்தது. அடுத்த வாரத்திற்குள் மேலும் மூன்று திரிணமுல் காங்கிரஸ் ராஜ்சபா எம்.பி.க்கள் வரை ராஜினாமா செய்யக்கூடும் என்றும், இது மம்தா தலைமையிலான கட்சிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement