அரசு துறை டெண்டர்களில் முறைகேடு; லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க உத்தரவு
சென்னை: தமிழக அரசு துறைகளில் நடந்த, பல கோடி ரூபாய் ஒப்பந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வீரப்பன் என்பவர் தாக்கல் செய்த மனு: மாநில அரசின் உள்கட்டமைப்பு பணிகள் சார்ந்த ஒப்பந்தங்கள் தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை கோரினேன். அதில் கிடைத்த விபரங்களை ஆய்வு செய்ததில், அரசின் பல்வேறு துறைகளில் போலியான ஆவணங்கள் வாயிலாக, குறிப்பிட்ட நிறுவனத்துக்கே ஒப்பந்தங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
இதன் வாயிலாக, அரசுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த, 2022ம் ஆண்டு முதல், 12க்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணிகளை, 'சீ ராக் இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ்' மற்றும் 'ஸ்ரீ பதி அசோசியேட்ஸ்' ஆகிய, இரண்டு நிறுவனங்கள் போலியான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பெற்று உள்ளன.
இரு நிறுவனங்களும், அரசு ஒப்பந்தங்களில் யாரும் பங்கேற்காத வகையில், கூட்டு சேர்ந்து தங்களுக்குள் போலியான போட்டியாளர்களாக காட்டி, பல்வேறு முறைகேடுகளை செய்து உள்ளன. டெண்டர் தகுதியை பெறுவதற்காக சமர்ப்பித்த துணை ஒப்பந்ததாரர் அனுபவ சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என்பதும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விபரங்கள் வாயிலாக உறுதியாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, 2025 ஆகஸ்ட்டில், லஞ்ச ஒழிப்பு துறை, நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணி துறைக்கு புகார் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், 'போலி ஆவணங்கள், சான்றிதழ்களால் பெறப்பட்ட ஒப்பந்தங்களால், மாநில அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டு உள்ளது. அதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ''மனுதாரர் அளித்த புகார் மனு குறித்து விசாரணை நடத்த, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் குழு அமைத்துள்ளார். அக்குழு கூட்டம் மே, 26ல் நடந்துள்ளது. ஒப்பந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிந்து, அறிக்கை தாக்கல் செய்யப்படும்,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஒப்பந்த முறைகேடுகள் புகார் தொடர்பாக, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அமைத்த குழு, எட்டு வாரத்தில் விசாரணை நடத்தி, அது தொடர்பான விபரங்களை, லஞ்ச ஒழிப்பு துறையிடம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
அறிக்கை அடிப்படையில் உரிய விசாரணை நடத்தி, தவறிழைத்த நபர்கள் மீது, சட்டப்படி உரிய நடவடிக்கையை, லஞ்ச ஒழிப்புத் துறை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.
லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தூக்குத்தண்டனை தராத வரை இது எல்லாம் கண்டுடைப்பு வேலைகள் தான் சும்மா லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும் நீதிபதிகளும் செவன் என்னும் மாதாமாதம் சம்பளம் வாங்கி தொப்பை வளர்ப்பதற்காக இந்த பேச்சுக்கள் எல்லாம் மக்களை ஏமாற்றும் முயற்சிகள் ஏமாற்றி கிடைக்கும் நயவஞ்சகர்கள் இவர்கள் இவர்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை
லஞ்ச ஒழிப்புத்துறையை நிர்வகிப்பது யாரு ???? ஓ .... யார் அந்த சார் பின்னணி ஆப்பீசரா ???? வெளங்குன மாதிரிதான் ....
லஞ்ச ஒழிப்புத்துறையிலேயே லஞ்சம் வாங்குற ஆட்கள் இருக்கும்போது விசாரணை எப்படி சரியாக நடக்கும்??
குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பின்பு ஜாமீனில் வெளியே விடுவது இதுதாண்டா
பொறுப்பாக இருக்கும் அதிகாரியை மாற்றினால் ஒரு வேளை விசாரிக்க வாய்ப்பு உண்டு. இல்லை என்றால் புகார் கொடுத்தவர்கள் மிரட்டப்படுவார்கள்.
பொதுப்பணித்துறையில் தோண்டி தோண்டி பார்த்தால் பல திடுக்கிடும் சம்பங்கள் வெளிவரும் ஒரு டெண்டராவது ஒழுங்காக விட வில்லை முதலிலுருந்து இவைகளை ஒரு தனி டீம் போட்டு ஆராய்ந்து பார்த்தால் பல கோடி ஊழல்கள் வெளி வரும் நடந்தது தெரியும் பிறகு நிதிமன்றமும் செல்ல வேண்டியிருக்கும்மேலும்
-
ஆமதாபாத் விமான விபத்து விசாரணையில் முன்னேற்றம்: அதிகாரிகள் தகவல்
-
மாநில மகளிர் கிரிக்கெட் 221 ரன் வித்தியாசத்தில் செங்கல்பட்டு அணி வெற்றி
-
காஞ்சி கிழக்கு ரயில் நிலையத்தில் கால அட்டவணை பலகை அவசியம்
-
துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு
-
முதியோர்களுக்கு போர்வை வழங்கல்
-
புற்றுநோய் பரிசோதனை முகாம்