முதியோர்களுக்கு போர்வை வழங்கல்
புதுச்சேரி: குறிஞ்சி நகர் அங்கன்வாடி மையத்தில் முதியோர்களுக்கு அரசு மூலம் இலவச காலணி மற்றும் போர்வையை சிவக்கொழுந்து எம்.எல்.ஏ., நேற்று வழங்கினார்.
புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில், 60 வயத்திற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச காலணி, போர்வை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
லாஸ்பேட்டை தொகுதி ஜீவானந்தபுரம், குறிஞ்சி நகர் பகுதி அங்கன்வாடி மையங்களில் நடந்த நிகழ்ச்சிக்கு சிவக்கொழுந்து எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு இலவச காலணி மற்றும் போர்வை வழங்கினார்.
இதில், சப்தகிரி அறக்கட்டளையின் பொறுப்பாளர் ரமேஷ்குமார், துறை அதிகாரிகள், அங்கன்வாடி ஊழியர்கள், என்.ஆர்.காங்., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நொய்யல் குறுக்கே பாலம் பணி விரைவுபடுத்த உத்தரவு
-
விளையாட்டு// தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப் சென்னை சவுமியாவுக்கு ‘வெள்ளி’
-
விளையாட்டு// மாநில மகளிர் கிரிக்கெட் 221 ரன் வித்தியாசத்தில் செங்கல்பட்டு அணி வெற்றி
-
அயநல்லுார் கிராமத்தில் வீடு, கோவிலில் திருட்டு
-
கூடலுார் ஏரியில் மனித எலும்புக்கூடு போலீசார் விசாரணை
-
சிற்றுந்து -மீது- பேருந்து மோதி 4 பேர் படுகாயம்; பைக் நாசம்
Advertisement
Advertisement