ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் நேற்றைய அறிக்கை:
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூரில் 9 செ.மீ., மழை பெய்துள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய கடலோர, ஆந்திரப் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில், சில இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,880 அதிகரிப்பு
-
பி.எஸ்.சி., நர்சிங் நுழைவு தேர்வு ஜூலைக்கு ஒத்திவைப்பு
-
'இண்டி' கூட்டணி தோல்வி ஏன்? இ.கம்யூ., கூட்டத்தில் 'பளீச்'
-
முதல்வர் ரங்கசாமி கவர்னருடன் திடீர் சந்திப்பு
-
காரைக்காலில் தொடர் மின் வெட்டு நாஜிம் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
-
முதல்வருக்கு தபால் அனுப்பிய ஹிந்து முன்னணியினர்