கரூரில் 'வீ த லீடர்ஸ்' உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்
கரூர்:தமிழக
பா.ஜ.,வில் இருந்து விலகி, அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர்
அண்ணாமலை, 'வீ த லீடர்ஸ்' என்ற புதிய இயக்கத்தைத்
தொடங்கியுள்ளார்.
இதையடுத்து, தமிழக பா.ஜ.,வில் முக்கியப்
பொறுப்புகளில் இருந்து வந்த முன்னணி நிர்வாகிகள் பலரும்,
தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தங்களது
ஆதரவாளர்களுடன் கூட்டமாக அண்ணாமலையின் இயக்கத்தில்
தங்களை இணைத்து வருகின்றனர். கிராமங்கள், நகரங்கள், மக்கள்
அதிகம் கூடும் இடங்களில் அண்ணாமலையின், 'வீ த லீடர்ஸ்'
இயக்கத்தில் உறுப்பினர்களை சேர்க்க சிறப்பு முகாம்களை அவரது
ஆதரவாளர்கள் நடத்தி வருகின்றனர்.
கரூர் உழவர் சந்தையில், 'வீ
த லீடர்ஸ்' சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், முன்னாள் பா.ஜ.,
நிர்வாகி கார்த்திகேயன் தலைமை வகித்து
தொடங்கி வைத்தார். ஜெயம் கணேஷ், அருள், சுரேஷ், துவாரகன், நாகமணி, சுசிலா உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,880 அதிகரிப்பு
-
பி.எஸ்.சி., நர்சிங் நுழைவு தேர்வு ஜூலைக்கு ஒத்திவைப்பு
-
'இண்டி' கூட்டணி தோல்வி ஏன்? இ.கம்யூ., கூட்டத்தில் 'பளீச்'
-
முதல்வர் ரங்கசாமி கவர்னருடன் திடீர் சந்திப்பு
-
காரைக்காலில் தொடர் மின் வெட்டு நாஜிம் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
-
முதல்வருக்கு தபால் அனுப்பிய ஹிந்து முன்னணியினர்