குடிநீர், கழிப்பிட வசதி இல்லை தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

13

தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள ஸ்ரீ ராம மந்திரம் (எஸ்.ஆர்.எம்.) அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 2300 மாணவிகள் படிக்கின்றனர். இங்கு மாணவிகள், ஆசிரியைகளுக்கு போதிய குடிநீர், கழிப்பிட வசதி இல்லை என புகார் எழுந்தது.

இதனால் அருகிலுள்ள வீடுகளுக்கு சென்று மாணவிகள், ஆசிரியைகள் இயற்கை உபாதைகளை கழித்தனர்.

இதில் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல், அலட்சியத்துடன் செயல்பட்டதாக கூறி தலைமை ஆசிரியை ஜீவாவை சஸ்பெண்ட் செய்து தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா உத்தரவிட்டார்.

Advertisement