பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் பாஜ அரசு முக்கியத்துவம்; பிரதமர் மோடி பெருமிதம்

2


புதுடில்லி: பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்காக என்டிஏ அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்; கடந்த 12 ஆண்டுகளில் என்டிஏ அரசு பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்காகப் பணியாற்றியுள்ளது. மேலும், இது அனைத்துத் துறைகளிலும் தெளிவாகக் தெரிகிறது. தொழில்முனைவு முதல் கல்வி, சுகாதாரம், துப்புரவு, வீட்டுவசதி, விளையாட்டு, அறிவியல் மற்றும் நிர்வாகம் வரை பல்வேறு துறைகளில் பெண்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.

பெண்களின் கண்ணியம், வாய்ப்பு மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் என்டிஏ அரசின் செயல்பாடுகள் ஆழமாக வேரூன்றியுள்ளன. இவை அனைத்தும் பெண்கள் தங்களின் முழுத் திறனையும் உணர்ந்து, தேசக் கட்டமைப்பில் இன்னும் வலுவாகப் பங்களிப்பதற்கான ஒரு சூழலை உருவாக்க உதவியுள்ளன.

இந்தியாவின் பெண் சக்தி அறிவியல், விண்வெளி மற்றும் கண்டுபிடிப்பு போன்ற துறைகளில் முத்திரை பதிப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். ட்ரோன் தொழில்நுட்பம் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் அவர்களின் அதிகரித்து வரும் பங்களிப்பு, வாய்ப்புகளுக்கான புதிய வழிகளைத் திறந்து விடுவதோடு, நாடு முழுவதும் உள்ள வளர்ச்சியை மாற்றி அமைக்கிறது, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement