ராஜ்யசபா வேட்பு மனு விவகாரம்; மீனாட்சி நடராஜன் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
புதுடில்லி: ராஜ்யசபா தேர்தலில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மீனாட்சி நடராஜன் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
மத்திய பிரதேச மாநிலத்தில் மூன்று ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜ சார்பில் மூவரும் காங்கிரஸ் சார்பில் மீனாட்சி நடராஜனும் போட்டியிட்டனர்.
வேட்பு மனு தாக்கல் செய்த மீனாட்சி நடராஜன், தெலுங்கானா நீதிமன்றத்தில் தன் மீது நிலுவையில் உள்ள வழக்கை மறைத்ததாக பாஜ வேட்பாளர் மகேஷ் கெவத் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் மீனாட்சியின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்தார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகளை பிரமாண பத்திரத்தில் தெரிவிக்க வேண்டும் என்பது சட்டம். அதை செய்யாமல் மறைத்து விட்டார் என்பதே மீனாட்சி நடராஜன் மீதான புகார்.
ஆனால் தேர்தல் அதிகாரியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் முறையிட்டது. ஆனால், தேர்தல் அதிகாரியின் செயல் சட்டபூர்வமான என்பதால் தேர்தல் கமிஷன் தலையிட மறுத்தது. சுப்ரீம் கோர்ட்டிலும் மீனாட்சி நடராஜன் மனு தாக்கல் செய்தார். அவர் சார்பில் இன்று மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி ஆஜராகி நீண்ட நேரம் வாதிட்டார்.
எனினும், மனுவை விசாரித்த நீதிமன்றம், ''இது போன்ற விவகாரங்களில் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர்வதே சரியாக இருக்கும். இந்த மனுவை விசாரிக்க விருப்பமில்லை. தள்ளுபடி செய்கிறோம்'' என உத்தரவிட்டது.
இந்தம்மாவை பார்த்தால் பெந்தகோஸ்தே மாதிரி இருக்கே.
வழக்கு இருக்குல்ல? அப்பறம் என்ன யோக்கியன் வேஷம்? போ. போயி குப்பை கிடங்கில் வேலை செய். அதுவும் நாட்டு சேவை தான். உனக்கு வக்காலத்து வாங்குறவிங்களை யும் சேர்த்துக் கோ.
உள்கட்சி விவகாரம் ... ராஜ்யசபா சீட் எதிர்பார்த்து கிடைக்காதவர்கள் செய்த குள்ளநரித்தனம் ,, இந்த அம்மணிக்கு பிரவீன் சக்ரவர்த்திக்கு பதில் தமிழ்நாட்டில் சீட் கொடுத்திருக்கலாம் . ஆரிய சதி என்று எண்ண தோன்றுகிறது
முன்பு அவை உறுப்பினராக இருந்தவருக்கு தேர்தல் மனுவை நிரம்பத் தெரியவில்லை? தேர்தல் முடியும்வரை காத்திருந்து பிறகு வழக்குப் போடுங்க . அப்பாவு, சிதம்பரம் தேர்தல் வழக்குகள் நினைவிருக்கலாம்.
இதுவரை எத்தனை எம்பிக்கள் மனு இது போல தள்ளுபடி செய்யப்பட்டது. தேர்தல் கமிஷனுக்கு தெரியாதா. தவறு என்பதால் நிராகரித்து உள்ளார்கள்.நீதிமன்றம் என்ன செய்யும். தவறு யார் செய்தாலும் தவறுதான்.தமிழகத்தில் சுலபமாக கிடைத்த ஒன்றை மபியில் கோட்டை விட்டது காங்கிரஸ். அவ்ளோதான்
கோடிக்கணக்கான வழக்குகள் தங்கி இருக்கும் வேளையில் இது போன்ற வேண்டாத வழக்குகள் எதற்கு? கொஞ்சமும் நேர்மையாக நடக்க தெரியாதவருக்கு பதவி எதற்கு?
எதிர் கட்சிகள் பிரச்சினை என்றால் விருப்பம் இல்லை என தெரிவிப்பதற்கு எதற்கு
சும்மா ஒரு தமாஷுக்குதான். வேற எதுக்கு.?
WASTAA EDHUKKU KARUTHU VAANDHI.
தேர்தல் அடிப்படை விதிகள் பற்றி தெரியாமலேயே போட்டியிட வந்தது நகைப்புக்கு உரியதாகவே இருக்கிறது. இதில் நீண்ட நேரம் வாதிட்டாராம் சிங்வி ... சுப்ரீம் கோர்ட்டாரின் நேர விரயத்துக்காக பெனால்டி போட்டிருக்கலாம். காலாவதியான காங்கிரஸ் இனி தேறாது.