100 நாள் வேலை தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே நுாறு நாள் வேலையில் ஈடுபட்டவர் மயங்கி விழுந்து இறந்தார்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெண்ணைவலம் ஊராட்சிக்குட்பட்ட பூசாரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன், 55; விவசாயி. இவர், நேற்று காலை வழக்கம்போல் அதே பகுதியில் நடந்த நுாறு நாள் வேலையில் ஈடுபட்டிருந்தார். காலை 11:30 மணியளவில் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

இதுகுறுத்து திருவெண்ணெயநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement